விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. விழுப்புரம் மாவட்டத்தில்.. அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்!

Jun 10, 2024,04:55 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த எப்ரல் 6ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். பொதுவாக ஒரு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலும் அல்லது ராஜினாமா செய்தாலும் ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த விதிப்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. அப்போதே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 




ஜூன் 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகி, ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள்  ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப் பதிவு ஜூலை 10ம் தேதி நடைபெறும், வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  புதிய திட்டங்களை அரசு அமல்படுத்தக்கூடாது. ஏற்கனவே செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை தொடர எந்த தடையும் இல்லை. ரூ. 50,000க்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் உரிய ஆவணம் வைத்திருக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்