விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி இறந்ததை அடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஆகும். திமுக கூட்டணியில் திமுகதான் இங்கு சிட்டிங் எம்எல்ஏ என்பதால் அக்கட்சியே மீண்டும் போட்டியிடுகிறது.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்குவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதல்வருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளள அன்னியூர் சிவா, திமுகவின் விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளே தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. இன்று காலையில்தான் புதிய நிர்வாகிகளும் மாவட்ட அளவில் மாற்றப்பட்டனர். தேர்தல் களத்தில் திமுக காளைப் பாய்ச்சலை கையில் எடுத்துள்ளதால், கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}