விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி இறந்ததை அடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஆகும். திமுக கூட்டணியில் திமுகதான் இங்கு சிட்டிங் எம்எல்ஏ என்பதால் அக்கட்சியே மீண்டும் போட்டியிடுகிறது.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா களமிறங்குவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதல்வருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளள அன்னியூர் சிவா, திமுகவின் விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளே தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. இன்று காலையில்தான் புதிய நிர்வாகிகளும் மாவட்ட அளவில் மாற்றப்பட்டனர். தேர்தல் களத்தில் திமுக காளைப் பாய்ச்சலை கையில் எடுத்துள்ளதால், கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}