விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் விக்கிரவாண்டி உள்பட 13 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை இன்று அறிவித்தது தேர்தல் ஆணையம்.
கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார் புகழேந்தி. அப்போது லோக்சபா தேர்தல் நடைமுறைகள் தொடங்கியிருந்தன. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.
பதினெட்டாவது லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மே ஒன்றாம் தேதி வரை நடைபெற்றது. அப்போதே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி தேதி நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாக உள்ளது. மனுத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். பின்னர் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப் பதிவு ஜூலை 10ம் தேதி நடைபெறும், வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}