ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!

Aug 27, 2025,10:58 AM IST

- கவிஞர் சு. சண்முகம், (சொகோ), புதுப்பேட்டை


ஒற்றைக்கொம்போனே! 

ஓர்கனிக்கு அம்மையப்பனை 

சுற்றி வந்து பெற்றவனே! 

சுப்பிரமணியனை வென்றவனே! 


எழுதுவதற்கு சுழி முதலே! 

எங்கும் நிறைந்திருப்பவனே! 

மூஞ்சுறு வாகனனே!

முச்சந்தியில் வீற்றிருப்பவனே!  

கொழுக்கட்டைப் பிரியனே!

கொடிபுல் அணிவோனே! 




முன் நிற்பவனே 

முழு முதல் ஆனவனே! 

சித்தி புத்தி நாயகனே! 

சிகண்டி கொடிக்கு மூத்தோனே!

தோப்புக்கரணப்பிரியனே! 

தொந்தி பெருத்தோனே! 

தும்பிக்கை  நாயகனே! 

நம்பிக்கை  தருபவனே! 


நானிலம் போற்றுவோனே! 

நாளும் வாழவைப்பவனே! 

முக்கண்ணன்  முதல் மகவே! 

அம்பிகையின் அரும்புதல்வனே! 

போற்றி! போற்றி! 

வினாயகா போற்றி!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!

news

Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?

news

தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்