ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!

Aug 27, 2025,10:58 AM IST

- கவிஞர் சு. சண்முகம், (சொகோ), புதுப்பேட்டை


ஒற்றைக்கொம்போனே! 

ஓர்கனிக்கு அம்மையப்பனை 

சுற்றி வந்து பெற்றவனே! 

சுப்பிரமணியனை வென்றவனே! 


எழுதுவதற்கு சுழி முதலே! 

எங்கும் நிறைந்திருப்பவனே! 

மூஞ்சுறு வாகனனே!

முச்சந்தியில் வீற்றிருப்பவனே!  

கொழுக்கட்டைப் பிரியனே!

கொடிபுல் அணிவோனே! 




முன் நிற்பவனே 

முழு முதல் ஆனவனே! 

சித்தி புத்தி நாயகனே! 

சிகண்டி கொடிக்கு மூத்தோனே!

தோப்புக்கரணப்பிரியனே! 

தொந்தி பெருத்தோனே! 

தும்பிக்கை  நாயகனே! 

நம்பிக்கை  தருபவனே! 


நானிலம் போற்றுவோனே! 

நாளும் வாழவைப்பவனே! 

முக்கண்ணன்  முதல் மகவே! 

அம்பிகையின் அரும்புதல்வனே! 

போற்றி! போற்றி! 

வினாயகா போற்றி!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!

news

எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!

news

காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!

news

பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்

news

அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!

news

ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி

news

தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு

news

திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்