- கவிஞர் சு. சண்முகம், (சொகோ), புதுப்பேட்டை
ஒற்றைக்கொம்போனே!
ஓர்கனிக்கு அம்மையப்பனை
சுற்றி வந்து பெற்றவனே!
சுப்பிரமணியனை வென்றவனே!
எழுதுவதற்கு சுழி முதலே!
எங்கும் நிறைந்திருப்பவனே!
மூஞ்சுறு வாகனனே!
முச்சந்தியில் வீற்றிருப்பவனே!
கொழுக்கட்டைப் பிரியனே!
கொடிபுல் அணிவோனே!

முன் நிற்பவனே
முழு முதல் ஆனவனே!
சித்தி புத்தி நாயகனே!
சிகண்டி கொடிக்கு மூத்தோனே!
தோப்புக்கரணப்பிரியனே!
தொந்தி பெருத்தோனே!
தும்பிக்கை நாயகனே!
நம்பிக்கை தருபவனே!
நானிலம் போற்றுவோனே!
நாளும் வாழவைப்பவனே!
முக்கண்ணன் முதல் மகவே!
அம்பிகையின் அரும்புதல்வனே!
போற்றி! போற்றி!
வினாயகா போற்றி!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}