ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!

Aug 27, 2025,10:58 AM IST

- கவிஞர் சு. சண்முகம், (சொகோ), புதுப்பேட்டை


ஒற்றைக்கொம்போனே! 

ஓர்கனிக்கு அம்மையப்பனை 

சுற்றி வந்து பெற்றவனே! 

சுப்பிரமணியனை வென்றவனே! 


எழுதுவதற்கு சுழி முதலே! 

எங்கும் நிறைந்திருப்பவனே! 

மூஞ்சுறு வாகனனே!

முச்சந்தியில் வீற்றிருப்பவனே!  

கொழுக்கட்டைப் பிரியனே!

கொடிபுல் அணிவோனே! 




முன் நிற்பவனே 

முழு முதல் ஆனவனே! 

சித்தி புத்தி நாயகனே! 

சிகண்டி கொடிக்கு மூத்தோனே!

தோப்புக்கரணப்பிரியனே! 

தொந்தி பெருத்தோனே! 

தும்பிக்கை  நாயகனே! 

நம்பிக்கை  தருபவனே! 


நானிலம் போற்றுவோனே! 

நாளும் வாழவைப்பவனே! 

முக்கண்ணன்  முதல் மகவே! 

அம்பிகையின் அரும்புதல்வனே! 

போற்றி! போற்றி! 

வினாயகா போற்றி!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்