விநாயகர் சதுர்த்தி.. செப்டம்பர் 17 இல்லை.. 18ம் தேதிதான் விடுமுறை.. அரசு அறிவிப்பு

Aug 31, 2023,04:12 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் அரசு விடுமுறை முன்பு அறிவித்த செப்டம்பர் 17ம் தேதி இல்லை என்றும், 18ம் தேதிக்கு விடுமுறையை மாற்றியும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. வட மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசு செப்டம்பர் 17ம் தேதி அரசு விடுமுறையை அறிவித்திருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. விடுமுறையை செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்ற வேண்டும் என்று ஜோதிடர்கள் தரப்பிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் சென்றன. ஜோதிடர்கள் கூற்றுப்படி, அவர்கள் கூறுகையில் அமாவாசை தொடங்கி நான்கு நாள் கழித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  

அமாவாசை செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 11:28 தொடங்கி மறுநாள் செப்டம்பர் 19ஆம் தேதி காலை 11: 44 மணிக்கு  முடிவடைகிறது. தமிழாநாட்டில் வாக்கிய பஞ்சாங்கத்தைதான் பெரும்பாலானவர்கள் பின்பற்றுகின்றனர். அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .  

தமிழகத்தில் உள்ள விநாயகரின் முக்கிய ஸ்தலங்களான திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி மற்றும் அனைத்து கோவில்களிலும் வரும் செப்டம்பர் 18ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
       
பண்டிதர்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்களின் அறிவுரைப்படி, செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  இந்த நிலையில் ஜோதிடர்களின் கோரிக்கையை பரிசீலித்த அரசு தற்போது விடுமுறையைக செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்