சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் முதல் தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும் மக்கள் விநாயகரின் களிமண் சிலைகள், படங்களுக்கு சிறப்புப் பூஜை செய்து கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை படையலிட்டு வணங்கி வழிபட்டனர்.
இதேபோல கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் இன்று களை கட்டியிருந்தது. அதிகாலையிலேயே மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசித்து மகிழ்ந்தனர்.
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குருணி விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்துக் கோவில்களிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விநாயகருக்கு கொழுக்கட்டை, பழங்கள், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வகையான படையல்களும் இடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டன.
வழக்கம்போல இந்த ஆண்டும் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அங்கும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் போதிய பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}