சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்குப் போதிய பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முதலே விநாயகர் சிலை விற்பனையும் மாநிலம் முழுவதும் களை கட்டத் தொடங்கி விட்டது. பெரும்பாலும் களிமண் சிலைகள்தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. தெருவோரங்களில், பஜார் பகுதிகளில் சிலைகள் விற்பனை அதிகம் காணப்பட்டது. விதம் விதமான பிள்ளையார் சிலைகளும் விற்பனை செய்யப்பட்டன. விநாயகர் சிலைகள் தவிர பூஜை தொடர்பான பிற பொருட்களின் விற்பனையும் களை கட்டியிலிருந்தது. விலையும் இந்த முறை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறினர்.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வார இறுதியைத் தொடர்ந்து மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதால் அதிக அளவில் சிறப்புப் பேருந்துகளுக்கும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}