சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்குப் போதிய பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முதலே விநாயகர் சிலை விற்பனையும் மாநிலம் முழுவதும் களை கட்டத் தொடங்கி விட்டது. பெரும்பாலும் களிமண் சிலைகள்தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. தெருவோரங்களில், பஜார் பகுதிகளில் சிலைகள் விற்பனை அதிகம் காணப்பட்டது. விதம் விதமான பிள்ளையார் சிலைகளும் விற்பனை செய்யப்பட்டன. விநாயகர் சிலைகள் தவிர பூஜை தொடர்பான பிற பொருட்களின் விற்பனையும் களை கட்டியிலிருந்தது. விலையும் இந்த முறை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறினர்.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வார இறுதியைத் தொடர்ந்து மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதால் அதிக அளவில் சிறப்புப் பேருந்துகளுக்கும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}