சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 35,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்குப் போதிய பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முதலே விநாயகர் சிலை விற்பனையும் மாநிலம் முழுவதும் களை கட்டத் தொடங்கி விட்டது. பெரும்பாலும் களிமண் சிலைகள்தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. தெருவோரங்களில், பஜார் பகுதிகளில் சிலைகள் விற்பனை அதிகம் காணப்பட்டது. விதம் விதமான பிள்ளையார் சிலைகளும் விற்பனை செய்யப்பட்டன. விநாயகர் சிலைகள் தவிர பூஜை தொடர்பான பிற பொருட்களின் விற்பனையும் களை கட்டியிலிருந்தது. விலையும் இந்த முறை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறினர்.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வார இறுதியைத் தொடர்ந்து மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதால் அதிக அளவில் சிறப்புப் பேருந்துகளுக்கும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}