சண்டிகர்: ஹரியானா சட்டசபைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடையில் 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது பிரதமர் மோடி உட்பட அனைத்து தரப்பினரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவு குரல் எழுப்பினர். இந்தியா திரும்பிய அவருக்கு அனைவரும் உற்சாக வரவேற்பும் அளித்தனர். இந்தியா திரும்பிய நிலையில், வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
வினேஷ் போகத் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை பெற்று வந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் பைராகி குமார் பின்னடைவை சந்தித்து வந்தார். 14வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். கடந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் கோட்டை விட்ட வெற்றியை சட்டசபைத் தேர்தலில் பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}