விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் சிக்கி உயிர் இழந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபத்தூர் மாயாண்டிதேவன் பட்டியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயக்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் இங்குள்ள 42 அறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலையில் பணிபுரிபவர்கள் இன்று வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். வேலை நேரத்தில் சல்பரேட் மருந்து தயாரிக்கும் பொடியை வேனில் இருந்து இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வேனில் பற்றிய தீ கொளுந்து விட்டு எறிந்தது. இதில் புலிகுட்டி மற்றும் கார்த்தி என்பவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
தீ கொளுந்து விட்டு எரிந்ததால், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது.
வெடி விபத்துகளில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தும் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. அடுத்து தீபாவளி பண்டிகை வர இருப்பதால், இது போன்ற விபத்துக்கள் அதிகரிக்காத வண்ணம் அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}