விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் சிக்கி உயிர் இழந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபத்தூர் மாயாண்டிதேவன் பட்டியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயக்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் இங்குள்ள 42 அறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலையில் பணிபுரிபவர்கள் இன்று வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். வேலை நேரத்தில் சல்பரேட் மருந்து தயாரிக்கும் பொடியை வேனில் இருந்து இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வேனில் பற்றிய தீ கொளுந்து விட்டு எறிந்தது. இதில் புலிகுட்டி மற்றும் கார்த்தி என்பவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

தீ கொளுந்து விட்டு எரிந்ததால், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடப்பது தொடர் கதையாக நடந்து வருகிறது.
வெடி விபத்துகளில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தும் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. அடுத்து தீபாவளி பண்டிகை வர இருப்பதால், இது போன்ற விபத்துக்கள் அதிகரிக்காத வண்ணம் அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சீற்றத்தில் சிஸ்டர் நிர்மலா.. தினந்தோறும் தீ மிதிக்கும் சீதா.. (சீதா - 2)
நீள் ஆயுள்.. நிறை செல்வம்.. ஓங்கி வாழும் மெஞ்ஞானம்.. 10 சங்கல்பங்களைக் கைக் கொள்ளுங்கள்!
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
டெல்லியில் முதல் முறையாக செயற்கை மழை...காற்றின் தரத்தை சீராக்க புதிய முயற்சி
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
{{comments.comment}}