"மணிப்பூர்".. 80 நாட்களுக்குப் பிறகு 80 விநாடிகளே பேசியுள்ளார் பிரதமர்.. காங். எம்.பி. தாக்கு

Jul 21, 2023,11:15 AM IST

டெல்லி: மணிப்பூர் பற்றி எரிய ஆரம்பித்து,  80 நாட்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்துப் பேசியுள்ளார். அதுவும் வெறும் 80 விநாடிகளே அவர் பேசியுள்ளார் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்


மணிப்பூர் மாநிலம் கடந்த சில மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி இனத்தவர்களுக்கும் இடையே வெடித்துள்ள இந்த கலவரத்தால்,  நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 


இந்த வன்முறை வெறியாட்டத்தின் விபரீத வீரியத்தை உணர்த்தும் வகையிலான ஒரு வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ���ாட்டு மக்களை பதறச் செய்தது. இரண்டு குக்கி இனப் பெண்களை மெ��்தி இனத்தைச் சேர்ந்த ஒரு வெறி பிடித்த ஆண் கும்பல் நிர்வாணமாக நடக்கச் செய்தும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியபடி வந்ததும் மக்களை வெகுண்டெழச் செய்தது.


மணிப்பூரில் நடந்து வரும் அட்டூழியங்களின் ஒரு துளியாக இது உலகுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடும் கோபத்துடன் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மணிப்பூரில் கலவரம் வெடித்தது முதல் வெளிப்படையாக இதுகுறித்து கருத்துக் கூறாமல் இருந்து வந்தார் பிரதமர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இந்த நிலையில் தான் பிரதமர் முதல் முறையாக இதுகுறித்து மீடியாவிடம் பேசியிருந்தார்.


இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்துக் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறுகையில், 80 நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முன்பு 80 விநாடிகள் மணிப்பூர் குறித்துப் பேசியுள்ளார் பிரதமர். ஆனால் நாடாளுமன்றத்துக்குள் ஒரு விநாடி கூட இதைப் பற்றி அவர் பேசவில்லை.  பிரதமர் அவையில் இதுகுறித்துப் பேச வேண்டும். உண்மை என்ன என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.


ஆளுநர் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். உள்துறை அமைச்சகத்துக்கு தான் ஒரு அறிக்கை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். அதில், 70 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இப்படி ஒரு வன்முறை வெறியாட்டத்தை தான் பார்த்ததே இல்லை என்று அவர் கூறியுள்ளார். தனியார் சேனலுக்கு அவர் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.  இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலம் சென்று நிலவரம் குறித்து ஆய்வும் நடத்தியுள்ளார். ஆளுநர் இப்படிப் பேசுகிறார். இதுகுறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். உண்மை என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாணிக்கம் தாகூர்.

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்