விஸ்தாராவுக்கு சிக்கல்.. போர்க்கொடி உயர்த்திய பைலட்டுகள்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து!

Apr 02, 2024,06:04 PM IST

டெல்லி: விஸ்தாரா நிறுவனத்தின் பைலட்டுகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் பல விமானங்களை விஸ்தாரா நிறுவனம் ரத்து செய்துள்ளது.


நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் கூட 38 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விஸ்தாராவில் பயணிக்க டிக்கெட் புக் பண்ணியிருந்த பயணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


மும்பையிலிருந்து கிளம்ப வேண்டிய 15 விமானங்களும், டெல்லியிலிருந்து 12 விமானங்களும், பெங்களூரிலிருந்து 11 விமானங்களையும் விஸ்தாரா நிறுவனம் இன்று ரத்து செய்தது.




விமானங்களை ரத்து செய்தது தொடர்பாக  முறையான அறிவிப்பைவிஸ்தாரா நிறுவனம் வெளியிடாததால் விமான நிலையங்களில் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். நீண்ட நேரம் காத்திருந்து காத்திருந்து பெரும் தாமதத்திற்குப் பின்னர்தான் விமானம் ரத்து என்ற தகவலை சொல்லியது விஸ்தாரா என்று பயணிகள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.


ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விஸ்தாரா விளக்கம் அளித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்களுக்கு வருந்துவதாகவும் அது தெரிவித்துள்ளது.


நிலைமையை சமாளிப்பதற்காக குறைந்த அளவிலான சேவையை மேற்கொள்ள விஸ்தாரா திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் இருக்கும் ஊழியர்களை வைத்து சமாளிக்க அது முடிவு செய்துள்ளது.


விரைவில் விஸ்தாரா நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணையவுள்ளது. இதையடுத்து விஸ்தாரா தனது ஊழியர்களின் சம்பள விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பைலட்டுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதுதான் தற்போது விஸ்தாரா நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட முக்கியக் காரணம். ஊதிய மாற்றம் குறித்த தகவலை இமெயில் மூலம் பைலட்டுகளுக்கு அனுப்பியுள்ள விஸ்தாரா நிறுவனம், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் ஏர் இந்தியாவுடன் இணையும் போது உங்களது பெயர் விடுபட்டுப் போகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் தற்போது விஸ்தாரா நிறுவனம் இறங்கியுள்ளது. இவர்களது சண்டையால் அப்பாவி பயணிகள்தான் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்