- ரேணுகா ராயன்
செந்தமிழில் மேழம் என்றும்
வழக்குத் தமிழில் சித்திரை என்றும்
கொண்டாடி மகிழ்கிறோம் நம் தமிழ் புத்தாண்டை.
சொக்கநாதரின் திருமணமும்
வைகையின் பிறப்பும்
கண்டதல்லவோ இச்சித்திரை
மக்கள் கூடி மகிழ, மனத்தாபங்களும் பகையும் ஒழித்து
நம் மக்கள் மகிழும் மாதமல்லவோ இச்சித்திரை!
அன்பையும் பண்பையும்
பறைசாற்றிட வந்ததல்லவோ சித்திரை!
ஆதவனை போல் இயங்கிடவும்
இளவேனிற் கால தன்மைதனை
நம்முள்ளே விதைக்க வந்ததல்லவோ இச்சித்திரை!

வெறும் பண்டிகையாய் அல்ல-
வாழ்வின் தத்துவத்தை மாங்காய் பச்சடியில் உணர்த்தும்
தமிழர்தம் உளப்பக்குவத்தை பறைசாற்றிட வந்ததல்லவோ....
சித்திரை பிறப்பும் புத்தாண்டும்.
மண் வளமும் நம் நலமும்
நாட்டின் உயர்வும் உய்ய
வாழ்த்த வந்தாளே
நம் அன்னை சித்திரை..!
நற்சிந்தனையும் மேன்மை மிக்க செயல்களையும் ஏந்தி
மேலும் பீடு நடையிடுவோம் இன்றும் எப்போதும்!
நமை காக்க தமிழ் அன்னை இருக்க,
அறத்தின் பாதையில் வெற்றி நோக்கி நடப்போம் வாருங்கள் எம் இனமே.....!
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}