மண் வளமும் நம் நலமும் .. நாட்டின் உயர்வும் உய்ய.. வாழ்த்த வந்தாளே.. நம் அன்னை சித்திரை..!

Apr 14, 2025,11:13 AM IST

- ரேணுகா ராயன்


செந்தமிழில் மேழம் என்றும் 

வழக்குத் தமிழில் சித்திரை என்றும் 

கொண்டாடி மகிழ்கிறோம் நம் தமிழ் புத்தாண்டை.


சொக்கநாதரின் திருமணமும் 

வைகையின் பிறப்பும் 

கண்டதல்லவோ இச்சித்திரை

மக்கள் கூடி மகிழ,  மனத்தாபங்களும் பகையும் ஒழித்து

நம் மக்கள் மகிழும் மாதமல்லவோ இச்சித்திரை!


அன்பையும் பண்பையும் 

பறைசாற்றிட வந்ததல்லவோ சித்திரை!

ஆதவனை போல் இயங்கிடவும்  

இளவேனிற் கால தன்மைதனை 

நம்முள்ளே விதைக்க வந்ததல்லவோ இச்சித்திரை! 




வெறும் பண்டிகையாய் அல்ல- 

வாழ்வின் தத்துவத்தை மாங்காய் பச்சடியில் உணர்த்தும்

தமிழர்தம் உளப்பக்குவத்தை பறைசாற்றிட வந்ததல்லவோ....


சித்திரை பிறப்பும் புத்தாண்டும்.


மண் வளமும் நம் நலமும் 

நாட்டின் உயர்வும் உய்ய

வாழ்த்த வந்தாளே

நம் அன்னை சித்திரை..! 


நற்சிந்தனையும் மேன்மை மிக்க செயல்களையும் ஏந்தி 

மேலும் பீடு நடையிடுவோம் இன்றும் எப்போதும்!


நமை காக்க தமிழ் அன்னை இருக்க, 

அறத்தின் பாதையில் வெற்றி நோக்கி நடப்போம் வாருங்கள் எம் இனமே‌.....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்