மண் வளமும் நம் நலமும் .. நாட்டின் உயர்வும் உய்ய.. வாழ்த்த வந்தாளே.. நம் அன்னை சித்திரை..!

Apr 14, 2025,11:13 AM IST

- ரேணுகா ராயன்


செந்தமிழில் மேழம் என்றும் 

வழக்குத் தமிழில் சித்திரை என்றும் 

கொண்டாடி மகிழ்கிறோம் நம் தமிழ் புத்தாண்டை.


சொக்கநாதரின் திருமணமும் 

வைகையின் பிறப்பும் 

கண்டதல்லவோ இச்சித்திரை

மக்கள் கூடி மகிழ,  மனத்தாபங்களும் பகையும் ஒழித்து

நம் மக்கள் மகிழும் மாதமல்லவோ இச்சித்திரை!


அன்பையும் பண்பையும் 

பறைசாற்றிட வந்ததல்லவோ சித்திரை!

ஆதவனை போல் இயங்கிடவும்  

இளவேனிற் கால தன்மைதனை 

நம்முள்ளே விதைக்க வந்ததல்லவோ இச்சித்திரை! 




வெறும் பண்டிகையாய் அல்ல- 

வாழ்வின் தத்துவத்தை மாங்காய் பச்சடியில் உணர்த்தும்

தமிழர்தம் உளப்பக்குவத்தை பறைசாற்றிட வந்ததல்லவோ....


சித்திரை பிறப்பும் புத்தாண்டும்.


மண் வளமும் நம் நலமும் 

நாட்டின் உயர்வும் உய்ய

வாழ்த்த வந்தாளே

நம் அன்னை சித்திரை..! 


நற்சிந்தனையும் மேன்மை மிக்க செயல்களையும் ஏந்தி 

மேலும் பீடு நடையிடுவோம் இன்றும் எப்போதும்!


நமை காக்க தமிழ் அன்னை இருக்க, 

அறத்தின் பாதையில் வெற்றி நோக்கி நடப்போம் வாருங்கள் எம் இனமே‌.....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்