Vizhinjam Port: விழிஞ்ஞம் துறைமுகம்.. இந்தியா மற்றும் கேரளாவின் வர்த்தக வளர்ச்சியில் புது அத்தியாயம்

May 02, 2025,06:32 PM IST

திருவனந்தபுரம்: இந்தியாவின் கடல் வா்த்தகத்தில் ஒரு புதிய அத்தியாயமாக மலர்ந்துள்ளது விழிஞ்ஞம் துறைமுகம்.


திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விழிஞ்ஞம்  சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது கேரளாவின் கடல் சாா்ந்த அடையாளத்தை உலக வரைபடத்தில் உயா்த்தும். இந்தத் திட்டம் இந்தியாவின் வா்த்தகத்தையும், கப்பல் போக்குவரத்தையும் மேம்படுத்தும். 


இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக முதலீடு இது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கேரள அரசு முதலீடு செய்துள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக மாறியுள்ளது. 8,867 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விழிஞ்ஞம் , இந்தியாவின் முதல் சரக்கு மாற்று துறைமுகம். இது நாட்டின் முதல் அரை-தானியங்கி (செமி ஆட்டோமேட்டிக்) துறைமுகம் ஆகும். இது முக்கியமான சர்வதேச கப்பல் பாதையில் இருந்து 10 கடல் மைல் தூரத்தில் உள்ளது. ஆழமான நீர் இருப்பதால் பெரிய கப்பல்கள் எளிதாக வரலாம். இதுவரை இந்தியாவின் சரக்கு பெட்டகங்களில் 75% கொழும்பு துறைமுகத்தில் கையாளப்பட்டன. இதனால் இந்தியாவுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டது. விழிஞ்ஞம் துறைமுகம் அந்த போக்குவரத்தை இந்தியாவுக்கு திருப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு செய்த அதிக முதலீட்டைக் கொண்டுள்ளது என்றால் அது விழிஞ்ஞம் துறைமுகம் தான். கேரள அரசு மொத்த திட்ட செலவில் மூன்றில் இரண்டு பங்கை ஏற்றுள்ளது. துறைமுகம் எந்த காலநிலையிலும் செயல்பட உதவும் அலை தடுப்பு சுவரின் முழு செலவையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. விழிஞ்ஞத்தில் உள்ள அலை தடுப்பு சுவர் இந்தியாவில் மிக ஆழமானது. இது சுமார் மூன்று கிலோமீட்டர் நீளம் கொண்டது. 28 மீட்டர் உயரத்தில், இது ஒரு பெரிய பொறியியல் சாதனை. சோதனை ஓட்டம் ஜூலை 13, 2024 அன்று தொடங்கியது. முழு வணிக செயல்பாடு டிசம்பர் 3, 2024 அன்று தொடங்கியது. மூன்று மாத சோதனை காலத்தில் 272 பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் நின்றன. 550,000-க்கும் அதிகமான சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டன.


விழிஞ்ஞம் துறைமுகத்தில் தானியங்கி கிரேன்கள் உள்ளன. கப்பலில் இருந்து கரைக்கு சரக்குகளை ஏற்றி இறக்க ரிமோட் மூலம் இயக்கப்படும் கிரேன்களும் உள்ளன. இது பாதுகாப்பான மற்றும் வேகமான செயல்பாட்டை உறுதி செய்கிறது. IIT மெட்ராஸுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் AI திறன் கொண்ட கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பும் இதில் உள்ளது.


தெற்காசியாவின் முக்கிய துறைமுக மையமாக விழிஞ்ஞம் மாறுகிறது. 2028 ஆம் ஆண்டளவில், கட்டுமானத்தின் அடுத்த கட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துறைமுகத்தின் ஆண்டு சரக்கு கையாளும் திறன் 3 மில்லியன் TEU-ஆக அதிகரிக்கும். இந்த கட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் செலவாகும். இதை அதானி போர்ட்ஸ் முழுமையாக வழங்கும்.




விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66-க்கு நேரடி சாலை வசதி உள்ளது. எதிர்கால சரக்கு வளர்ச்சியை கையாள கேரளாவின் முதல் cloverleaf interchange இங்கு உள்ளது. துறைமுகத்தை தேசிய ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கும் ரயில் பாதை விரைவில் கட்டப்படும்.


இந்த வளர்ச்சிகளுடன், விழிஞ்சம் தெற்காசியாவின் முக்கிய வா்த்தக நுழைவாயிலாக மாறும். இந்தியாவின் கடல் வலிமையின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்