மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!

Sep 08, 2024,06:05 PM IST

சென்னை: கோட் படத்தில் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை பாட வைத்தது போல இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஒலிக்க வைத்துள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.


செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது எதை எடுத்தாலும் ஏஐ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். முதலில் உருவத்தில் ஆரம்பித்த இந்த ஏஐ தொழில்நுட்பம் இப்போது இல்லாதவர்களின் குரலையும் கூட பேச வைக்கும் அளவுக்கு மாறி விட்டது. இப்போது என்ன வேண்டுமானாலும் இந்த தொழில்நுட்பத்தால் செய்ய முடியும் என்பதை  விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் கோட் படம் நிரூபித்துள்ளது.





இந்தப் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உருவத்தைக் கொண்டு வந்து காட்டி அசத்தி விட்டனர். அதேபோல மறைந்த பாடகி பவதாரணியின் குரலையும் ஒரு பாடலுக்கு ஒலிக்க வைத்து அனைவரையும் வியக்க வைத்து விட்டனர். ஒரே படத்தில் இரண்டு விதமான அசத்தல் தொழில்நுட்ப சாதனையை செய்து மிரள வைத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.


இந்த வரிசையில் இப்போது வேட்டையன் படத்திலும் இதேபோல ஒரு டெக்னாலஜியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இபபடத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை ஒரு பிரபலமான லெஜன்டரி சிங்கர் பாடியிருக்கிறார் என்று கூறியிருந்தது படக் குழு. அதாவது மிகப் பிரபலமான அந்தப் பாடகரின் குரல் இடம் பெற்றிருப்பதாக லைக்கா நிறுவனத்தின் எக்ஸ் தளப் பதிவில் சொல்லப்பட்டது.  இதையடுத்து அது யார் என்ற சுவாரஸ்யமான விவாதம் கிளம்பியது.


சிலர் எஸ்பிபி என்று சொன்னார்கள். ஆனால் பலரது கருத்து இது மலேசியா வாசுதேவன் குரல்தான்.. பாடலைப் பார்த்தாலே ஈஸியாகத் தெரிகிறதே என்று குதூலகித்தார்கள். இப்போது அதை உறுதிப்படுத்தி விட்டது லைக்கா. மலேசியா வாசுதேவனின் குரலில்தான் இந்தப் பாடல் ஒலிக்கப் போகிறதாம். கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்காக மலேசியா வாசுதேவனின் குரல் பாடப் போகிறது. 


ரஜினிகாந்த்துக்கு மிக மிக பொருத்தமான குரல் மலேசியாவின் குரல். எஸ்பிபியைப் போலவே மலேசியா வாசுதேவனும் ரஜினிக்காக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். மாவீரன் படப் பாடல்கள், முரட்டுக்காளை படப் பாடல் என பெரிய லிஸ்ட்டே போடலாம். அப்படிப்பட்ட அபாரமான குரலில் மீண்டும் ரஜினி பாடல் வரப் போவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்