சென்னை: கோட் படத்தில் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை பாட வைத்தது போல இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஒலிக்க வைத்துள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது எதை எடுத்தாலும் ஏஐ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். முதலில் உருவத்தில் ஆரம்பித்த இந்த ஏஐ தொழில்நுட்பம் இப்போது இல்லாதவர்களின் குரலையும் கூட பேச வைக்கும் அளவுக்கு மாறி விட்டது. இப்போது என்ன வேண்டுமானாலும் இந்த தொழில்நுட்பத்தால் செய்ய முடியும் என்பதை விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் கோட் படம் நிரூபித்துள்ளது.

இந்தப் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உருவத்தைக் கொண்டு வந்து காட்டி அசத்தி விட்டனர். அதேபோல மறைந்த பாடகி பவதாரணியின் குரலையும் ஒரு பாடலுக்கு ஒலிக்க வைத்து அனைவரையும் வியக்க வைத்து விட்டனர். ஒரே படத்தில் இரண்டு விதமான அசத்தல் தொழில்நுட்ப சாதனையை செய்து மிரள வைத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்த வரிசையில் இப்போது வேட்டையன் படத்திலும் இதேபோல ஒரு டெக்னாலஜியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இபபடத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை ஒரு பிரபலமான லெஜன்டரி சிங்கர் பாடியிருக்கிறார் என்று கூறியிருந்தது படக் குழு. அதாவது மிகப் பிரபலமான அந்தப் பாடகரின் குரல் இடம் பெற்றிருப்பதாக லைக்கா நிறுவனத்தின் எக்ஸ் தளப் பதிவில் சொல்லப்பட்டது. இதையடுத்து அது யார் என்ற சுவாரஸ்யமான விவாதம் கிளம்பியது.
சிலர் எஸ்பிபி என்று சொன்னார்கள். ஆனால் பலரது கருத்து இது மலேசியா வாசுதேவன் குரல்தான்.. பாடலைப் பார்த்தாலே ஈஸியாகத் தெரிகிறதே என்று குதூலகித்தார்கள். இப்போது அதை உறுதிப்படுத்தி விட்டது லைக்கா. மலேசியா வாசுதேவனின் குரலில்தான் இந்தப் பாடல் ஒலிக்கப் போகிறதாம். கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்காக மலேசியா வாசுதேவனின் குரல் பாடப் போகிறது.
ரஜினிகாந்த்துக்கு மிக மிக பொருத்தமான குரல் மலேசியாவின் குரல். எஸ்பிபியைப் போலவே மலேசியா வாசுதேவனும் ரஜினிக்காக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். மாவீரன் படப் பாடல்கள், முரட்டுக்காளை படப் பாடல் என பெரிய லிஸ்ட்டே போடலாம். அப்படிப்பட்ட அபாரமான குரலில் மீண்டும் ரஜினி பாடல் வரப் போவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தைப்பூசமும் வள்ளலாரும்.. உணர்த்தும் அருட் பெரும் செய்தி!
நீதி சொல்ல இத்தனை நூல்களா.. தமிழின் தனிப்பெருமை.. உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
{{comments.comment}}