மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!

Sep 08, 2024,06:05 PM IST

சென்னை: கோட் படத்தில் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை பாட வைத்தது போல இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஒலிக்க வைத்துள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.


செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது எதை எடுத்தாலும் ஏஐ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். முதலில் உருவத்தில் ஆரம்பித்த இந்த ஏஐ தொழில்நுட்பம் இப்போது இல்லாதவர்களின் குரலையும் கூட பேச வைக்கும் அளவுக்கு மாறி விட்டது. இப்போது என்ன வேண்டுமானாலும் இந்த தொழில்நுட்பத்தால் செய்ய முடியும் என்பதை  விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் கோட் படம் நிரூபித்துள்ளது.





இந்தப் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உருவத்தைக் கொண்டு வந்து காட்டி அசத்தி விட்டனர். அதேபோல மறைந்த பாடகி பவதாரணியின் குரலையும் ஒரு பாடலுக்கு ஒலிக்க வைத்து அனைவரையும் வியக்க வைத்து விட்டனர். ஒரே படத்தில் இரண்டு விதமான அசத்தல் தொழில்நுட்ப சாதனையை செய்து மிரள வைத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.


இந்த வரிசையில் இப்போது வேட்டையன் படத்திலும் இதேபோல ஒரு டெக்னாலஜியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இபபடத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை ஒரு பிரபலமான லெஜன்டரி சிங்கர் பாடியிருக்கிறார் என்று கூறியிருந்தது படக் குழு. அதாவது மிகப் பிரபலமான அந்தப் பாடகரின் குரல் இடம் பெற்றிருப்பதாக லைக்கா நிறுவனத்தின் எக்ஸ் தளப் பதிவில் சொல்லப்பட்டது.  இதையடுத்து அது யார் என்ற சுவாரஸ்யமான விவாதம் கிளம்பியது.


சிலர் எஸ்பிபி என்று சொன்னார்கள். ஆனால் பலரது கருத்து இது மலேசியா வாசுதேவன் குரல்தான்.. பாடலைப் பார்த்தாலே ஈஸியாகத் தெரிகிறதே என்று குதூலகித்தார்கள். இப்போது அதை உறுதிப்படுத்தி விட்டது லைக்கா. மலேசியா வாசுதேவனின் குரலில்தான் இந்தப் பாடல் ஒலிக்கப் போகிறதாம். கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்காக மலேசியா வாசுதேவனின் குரல் பாடப் போகிறது. 


ரஜினிகாந்த்துக்கு மிக மிக பொருத்தமான குரல் மலேசியாவின் குரல். எஸ்பிபியைப் போலவே மலேசியா வாசுதேவனும் ரஜினிக்காக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். மாவீரன் படப் பாடல்கள், முரட்டுக்காளை படப் பாடல் என பெரிய லிஸ்ட்டே போடலாம். அப்படிப்பட்ட அபாரமான குரலில் மீண்டும் ரஜினி பாடல் வரப் போவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்