நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களியுங்கள்.. ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்த வாக்காளர்

Apr 19, 2024,05:45 PM IST

சென்னை: ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்துள்ளார் சென்னையை சேர்ந்த 72 வயதான வாக்காளர் ரகுநாதன்.


தமிழத்தில் 39 தொகுதிகளும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு  இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.


இந்தாண்டு குறிப்பாக முதியவர்கள் வாக்கு செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வயதுடையவர்களை விட சீனியர் சிட்டிசன்கள் தான் அதிக ஆர்வத்தில் வாக்களித்து வருகின்றனர். 102, 85, 70 என அதிக வயதுடையோர் பலர் வாக்களித்துள்ளனர். இப்படி ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் 72 வயதுடைய ரகுநாதன் என்பவர் ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்து, வாக்களிக்க வாய்ப்பு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு உதாரணமாக விளங்கியுள்ளார். 




சென்னையை சேர்ந்த இவர் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் உடலில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் பொருத்தியுள்ளார். அத்துடன் வந்து தனது வாக்கினை வரிசையில் நின்று செலுத்திவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களியுங்கள். போன அசெம்பிளி எலக்சன்லையும் வந்து போட்டிருக்கேன். ஓட்டு போடனும்னு ஒரு தீர்மானத்தோட வந்திருக்கேன். 


என்னோட விருப்பத்த தெரிவிக்கனும் என்று வந்து ஓட்டு போட்டுருக்கேன். கூடிய மட்டும் வயதானவர்களும் சரி அனைவரும் வந்து ஓட்டு போடனும்னு சொல்லி ரெக்வஸ்ட் பண்ணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்