நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களியுங்கள்.. ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்த வாக்காளர்

Apr 19, 2024,05:45 PM IST

சென்னை: ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்துள்ளார் சென்னையை சேர்ந்த 72 வயதான வாக்காளர் ரகுநாதன்.


தமிழத்தில் 39 தொகுதிகளும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு  இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.


இந்தாண்டு குறிப்பாக முதியவர்கள் வாக்கு செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வயதுடையவர்களை விட சீனியர் சிட்டிசன்கள் தான் அதிக ஆர்வத்தில் வாக்களித்து வருகின்றனர். 102, 85, 70 என அதிக வயதுடையோர் பலர் வாக்களித்துள்ளனர். இப்படி ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் 72 வயதுடைய ரகுநாதன் என்பவர் ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்து, வாக்களிக்க வாய்ப்பு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு உதாரணமாக விளங்கியுள்ளார். 




சென்னையை சேர்ந்த இவர் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் உடலில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் பொருத்தியுள்ளார். அத்துடன் வந்து தனது வாக்கினை வரிசையில் நின்று செலுத்திவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களியுங்கள். போன அசெம்பிளி எலக்சன்லையும் வந்து போட்டிருக்கேன். ஓட்டு போடனும்னு ஒரு தீர்மானத்தோட வந்திருக்கேன். 


என்னோட விருப்பத்த தெரிவிக்கனும் என்று வந்து ஓட்டு போட்டுருக்கேன். கூடிய மட்டும் வயதானவர்களும் சரி அனைவரும் வந்து ஓட்டு போடனும்னு சொல்லி ரெக்வஸ்ட் பண்ணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்