சென்னை: ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்துள்ளார் சென்னையை சேர்ந்த 72 வயதான வாக்காளர் ரகுநாதன்.
தமிழத்தில் 39 தொகுதிகளும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்தாண்டு குறிப்பாக முதியவர்கள் வாக்கு செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வயதுடையவர்களை விட சீனியர் சிட்டிசன்கள் தான் அதிக ஆர்வத்தில் வாக்களித்து வருகின்றனர். 102, 85, 70 என அதிக வயதுடையோர் பலர் வாக்களித்துள்ளனர். இப்படி ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் 72 வயதுடைய ரகுநாதன் என்பவர் ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்து, வாக்களிக்க வாய்ப்பு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு உதாரணமாக விளங்கியுள்ளார்.

சென்னையை சேர்ந்த இவர் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் உடலில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் பொருத்தியுள்ளார். அத்துடன் வந்து தனது வாக்கினை வரிசையில் நின்று செலுத்திவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களியுங்கள். போன அசெம்பிளி எலக்சன்லையும் வந்து போட்டிருக்கேன். ஓட்டு போடனும்னு ஒரு தீர்மானத்தோட வந்திருக்கேன்.
என்னோட விருப்பத்த தெரிவிக்கனும் என்று வந்து ஓட்டு போட்டுருக்கேன். கூடிய மட்டும் வயதானவர்களும் சரி அனைவரும் வந்து ஓட்டு போடனும்னு சொல்லி ரெக்வஸ்ட் பண்ணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}