சென்னை: ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்துள்ளார் சென்னையை சேர்ந்த 72 வயதான வாக்காளர் ரகுநாதன்.
தமிழத்தில் 39 தொகுதிகளும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்தாண்டு குறிப்பாக முதியவர்கள் வாக்கு செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வயதுடையவர்களை விட சீனியர் சிட்டிசன்கள் தான் அதிக ஆர்வத்தில் வாக்களித்து வருகின்றனர். 102, 85, 70 என அதிக வயதுடையோர் பலர் வாக்களித்துள்ளனர். இப்படி ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் 72 வயதுடைய ரகுநாதன் என்பவர் ஆக்சிஜன் ஜெனரேட்டருடன் வந்து வாக்களித்து, வாக்களிக்க வாய்ப்பு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு உதாரணமாக விளங்கியுள்ளார்.

சென்னையை சேர்ந்த இவர் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் உடலில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் பொருத்தியுள்ளார். அத்துடன் வந்து தனது வாக்கினை வரிசையில் நின்று செலுத்திவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களியுங்கள். போன அசெம்பிளி எலக்சன்லையும் வந்து போட்டிருக்கேன். ஓட்டு போடனும்னு ஒரு தீர்மானத்தோட வந்திருக்கேன்.
என்னோட விருப்பத்த தெரிவிக்கனும் என்று வந்து ஓட்டு போட்டுருக்கேன். கூடிய மட்டும் வயதானவர்களும் சரி அனைவரும் வந்து ஓட்டு போடனும்னு சொல்லி ரெக்வஸ்ட் பண்ணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}