- சுதாகரி
காத்திருக்கிறேன்
பூஞ்சோலையில்
தென்றலாய் நீ வருவாய் என
விழித்திருக்கிறேன்
நள்ளிரவில்
நிலவாய் குளிர் தருவாய் என!
பார்த்திருக்கிறேன்
பாதையெல்லாம்
எனக்காக நீ வருவாய் என
பஞ்சு மெத்தை விரித்துள்ளேன்
உன் பாதம் நோகுமென!

பைந்தமிழ் பா வடித்தேன்
இசையாக நீ வேண்டுமென
பண்ணோடு பாடி வந்தேன்
இணையாய் நீ வருவாய் என!
விழியெல்லாம் தேக்கி வைத்தேன்
என் பார்வையாய் நீ வேண்டுமென
விண்வெளியைச்
சுற்றி வந்தேன்
என் ஆகாயம் நீ என!
மனிதனாய் நான் மாறவும்
மனதை தேற்றிக் கொண்டேன்
மனிதமாய் என் மனதில்
நீ இருக்க சம்மதித்தால்!
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}