காத்திருக்கிறேன் நீ வருவாய் என.. மனிதமாய் என் மனதில்.. நீ இருக்க சம்மதித்தால்!!

May 30, 2024,01:07 PM IST

- சுதாகரி


காத்திருக்கிறேன்

பூஞ்சோலையில்

தென்றலாய் நீ வருவாய் என

விழித்திருக்கிறேன்

நள்ளிரவில் 

நிலவாய் குளிர் தருவாய் என!


பார்த்திருக்கிறேன்

பாதையெல்லாம்

எனக்காக நீ வருவாய் என

பஞ்சு மெத்தை விரித்துள்ளேன்

உன் பாதம் நோகுமென!




பைந்தமிழ் பா வடித்தேன்

இசையாக நீ வேண்டுமென

பண்ணோடு பாடி வந்தேன்

இணையாய் நீ வருவாய் என!


விழியெல்லாம் தேக்கி வைத்தேன்

என் பார்வையாய் நீ வேண்டுமென

விண்வெளியைச் 

சுற்றி வந்தேன்

என் ஆகாயம் நீ என!


மனிதனாய் நான் மாறவும்

மனதை தேற்றிக் கொண்டேன்

மனிதமாய் என் மனதில்

நீ இருக்க சம்மதித்தால்!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்