காத்திருக்கிறேன் நீ வருவாய் என.. மனிதமாய் என் மனதில்.. நீ இருக்க சம்மதித்தால்!!

May 30, 2024,01:07 PM IST

- சுதாகரி


காத்திருக்கிறேன்

பூஞ்சோலையில்

தென்றலாய் நீ வருவாய் என

விழித்திருக்கிறேன்

நள்ளிரவில் 

நிலவாய் குளிர் தருவாய் என!


பார்த்திருக்கிறேன்

பாதையெல்லாம்

எனக்காக நீ வருவாய் என

பஞ்சு மெத்தை விரித்துள்ளேன்

உன் பாதம் நோகுமென!




பைந்தமிழ் பா வடித்தேன்

இசையாக நீ வேண்டுமென

பண்ணோடு பாடி வந்தேன்

இணையாய் நீ வருவாய் என!


விழியெல்லாம் தேக்கி வைத்தேன்

என் பார்வையாய் நீ வேண்டுமென

விண்வெளியைச் 

சுற்றி வந்தேன்

என் ஆகாயம் நீ என!


மனிதனாய் நான் மாறவும்

மனதை தேற்றிக் கொண்டேன்

மனிதமாய் என் மனதில்

நீ இருக்க சம்மதித்தால்!

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்