- சுதாகரி
காத்திருக்கிறேன்
பூஞ்சோலையில்
தென்றலாய் நீ வருவாய் என
விழித்திருக்கிறேன்
நள்ளிரவில்
நிலவாய் குளிர் தருவாய் என!
பார்த்திருக்கிறேன்
பாதையெல்லாம்
எனக்காக நீ வருவாய் என
பஞ்சு மெத்தை விரித்துள்ளேன்
உன் பாதம் நோகுமென!

பைந்தமிழ் பா வடித்தேன்
இசையாக நீ வேண்டுமென
பண்ணோடு பாடி வந்தேன்
இணையாய் நீ வருவாய் என!
விழியெல்லாம் தேக்கி வைத்தேன்
என் பார்வையாய் நீ வேண்டுமென
விண்வெளியைச்
சுற்றி வந்தேன்
என் ஆகாயம் நீ என!
மனிதனாய் நான் மாறவும்
மனதை தேற்றிக் கொண்டேன்
மனிதமாய் என் மனதில்
நீ இருக்க சம்மதித்தால்!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}