இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, ஷாருக் கான் தன் அணியின் வீரர்கள் சோர்வடையாமல் இருக்க ஒரு போயிங் விமானத்தையே ஏற்பாடு செய்தார். ஷாருக் கான் KKR அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாசிம் அக்ரம் 2010 முதல் 2016 வரை KKR அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார். அந்த அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றபோது அவர் முக்கிய பங்காற்றினார்.
வாசிம் அக்ரம் VU ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில் இந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார். 2012 ஐபிஎல் சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாக் அவுட் போட்டியில் விளையாட இருந்தது. போட்டி கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. வீரர்கள் களைப்படையாமல் இருக்க ஷாருக் கான் ஒரு போயிங் விமானத்தையே ஏற்பாடு செய்தார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் மேலும் கூறுகையில், 2012 ஐபிஎல் சீசனில் இது நடந்தது என்று நினைக்கிறேன். எங்கள் நாக் அவுட் போட்டி கொல்கத்தாவில் இருந்தது. நாங்கள் எங்கிருந்தோ வர வேண்டியிருந்தது. ஷாருக் கான் அங்கு இருந்தார். அதனால் நான் அவரிடம், Mr கான், ஒரு வேண்டுகோள். டீம் ரொம்ப டயர்டாக இருக்கிறது. நாங்கள் நாளை போக வேண்டும். நாளை மறுநாள் போட்டி. தனியாக ஒரு பிளேன் ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டேன்.
அப்படிங்கிறீங்களா.. நோ பிராப்ளம் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு பிளேன் ரெடி செய்கிறேன்.. ஓகேவா என்று கூறியதும் எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. தயங்கித் தயங்கி கேட்டதற்கு அவர் உடனடியாக ஏற்பாடு செய்வதாக கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் சொன்னபடியே ஒரு மணி நேரத்தில், முழு போயிங் விமானமும் அணி வீரர்கள் அனைவருக்காகவும் தயாராக இருந்தது என்றார் வாசிம் அக்ரம்.
2012 ஆம் ஆண்டு KKR அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி IPL கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஷாருக் கான் தன் அணி வீரர்களுக்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}