மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலாக கன மழை.. குற்றாலத்தில் வெள்ளம்.. குளிக்கத் தடை

Nov 20, 2024,11:23 AM IST

சென்னை: குமரி கடல் பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது.இதனால் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் அநேக இடங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், சிவகாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழை காரணமாக தென்காசி நெல்லை ராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக அருவிகள் மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி


நெல்லை:


நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது அதே சமயம் கனமழை காரணமாக களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி: 


கன்னியாகுமரி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குமரி கடல் பகுதியில் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மழை நின்ற பிறகு அப்பகுதிகளில் படகு சேவை தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 


குற்றால அருவி:


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருகி மெயின் அருவிகளில் அதிகாலையிலேயே குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பழைய குற்றால அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு வந்து குளிக்க கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்

news

Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?

news

சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!

news

ஆணுக்கு சமமாய் நானும் தான்!

news

The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!

news

கோவிந்தனை கொண்டாடுவோம்.. கோகுலத்தில் விளையாடுவோம்!

news

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?

news

மார்கழி மாதம் முதல் பிரதோஷம் இன்று.. அதன் சிறப்புகள் தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 17, 2025... இன்று 2025ம் ஆண்டின் கடைசி பிரதோஷம்

அதிகம் பார்க்கும் செய்திகள்