சேலம்: காவிரி குழு மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 60, 771 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மழை நீடித்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையில் இருந்து 80 கனஅடி வரை நீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் காவிரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில், கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையில் இருந்து 80,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 21,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. அதாவது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79,682ல் இருந்து 60, 771 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நீர் திறப்பு குறித்து என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை விரைந்து பெற்று தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4.85 அடி அளவிற்கு உயர்ந்து,தற்போது அணை நீர்மட்டம் 86.85 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 49.12 டிஎம்சி ஆக உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}