சென்னைவாசிகளே.. மார்ச் 21 டூ 26 வரை பராமரிப்பு பணி காரணமாக.. குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

Mar 21, 2025,06:11 PM IST

சென்னை: சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 21 முதல் 26 வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்  அகற்றும் வாரியம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமித்து வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை பெருநகரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும், பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.


ஏனெனில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் குழாய்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய காலங்களில் மக்கள் குடிநீரை வீணாக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான அறிவிப்பை  சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ளது.




அதன்படி,சென்னையில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   நெம்மேலியில் அமைந்துள்ள ஒரு நாளைக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் மார்ச் 21 முதல் 26 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். 


குறிப்பாக, மார்ச் 21, 23, 25, ஆகிய தேதிகளில் திருவான்மியூர், கொட்டிவாக்கம் ஈச்சம்பாக்கம், வெட்டுவான்கேணி, கொட்டிவாக்கம், நீலாங்கரை, உத்தண்டி, ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். 


அதேபோல் மார்ச் 22, 24, 26, ஆகிய தேதிகளில் பாலவாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். குறிப்பிட்ட தேதிகள் நீங்கலாக, குடிநீர் விநியோகம் மாற்று நாட்களில் வழங்கப்படும்.


இந்த நாட்களில் குடிநீர் விநியோகம் அவசியமான காலகட்டங்களில், டயல் பார் வாட்டர் அல்லது https://cmwssb.tn.gov.in/என்ற இணையதளத்தை பயன்படுத்தி குடிநீர் டோக்கன்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம். 


மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் எந்த தடையும் இன்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.  அதே சமயத்தில் சென்னையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பொதுமக்கள்  முன்னெச்சரிக்கையாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமித்து வைக்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்