சென்னைவாசிகளே.. மார்ச் 21 டூ 26 வரை பராமரிப்பு பணி காரணமாக.. குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

Mar 21, 2025,06:11 PM IST

சென்னை: சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 21 முதல் 26 வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்  அகற்றும் வாரியம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமித்து வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை பெருநகரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும், பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.


ஏனெனில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் குழாய்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய காலங்களில் மக்கள் குடிநீரை வீணாக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான அறிவிப்பை  சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ளது.




அதன்படி,சென்னையில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   நெம்மேலியில் அமைந்துள்ள ஒரு நாளைக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் மார்ச் 21 முதல் 26 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். 


குறிப்பாக, மார்ச் 21, 23, 25, ஆகிய தேதிகளில் திருவான்மியூர், கொட்டிவாக்கம் ஈச்சம்பாக்கம், வெட்டுவான்கேணி, கொட்டிவாக்கம், நீலாங்கரை, உத்தண்டி, ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். 


அதேபோல் மார்ச் 22, 24, 26, ஆகிய தேதிகளில் பாலவாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். குறிப்பிட்ட தேதிகள் நீங்கலாக, குடிநீர் விநியோகம் மாற்று நாட்களில் வழங்கப்படும்.


இந்த நாட்களில் குடிநீர் விநியோகம் அவசியமான காலகட்டங்களில், டயல் பார் வாட்டர் அல்லது https://cmwssb.tn.gov.in/என்ற இணையதளத்தை பயன்படுத்தி குடிநீர் டோக்கன்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம். 


மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் எந்த தடையும் இன்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.  அதே சமயத்தில் சென்னையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பொதுமக்கள்  முன்னெச்சரிக்கையாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமித்து வைக்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்