வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணி 10வது நாளாக தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக நேற்று சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று அங்கு தீவிர சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.
பருவமழை தீவிரமடைந்தால் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி போன்ற சிறிய கிராமங்களில் அதி பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் தரைமட்டமானது. அங்கு வசித்து வந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கின. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 413 பேர் உயிரிழந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட 1968 பேர் 16 முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உறவினர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் முகாம்களில் உள்ளவர்களை மறுவாழ்வுக்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வயநாடு நிலச் சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணி பத்தாவது நாளாக நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் நேற்று சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
{{comments.comment}}