வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணி 10வது நாளாக தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக நேற்று சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று அங்கு தீவிர சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.
பருவமழை தீவிரமடைந்தால் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி போன்ற சிறிய கிராமங்களில் அதி பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் தரைமட்டமானது. அங்கு வசித்து வந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கின. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 413 பேர் உயிரிழந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட 1968 பேர் 16 முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி உறவினர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் முகாம்களில் உள்ளவர்களை மறுவாழ்வுக்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வயநாடு நிலச் சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணி பத்தாவது நாளாக நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் நேற்று சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}