வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணி 10வது நாளாக தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக நேற்று சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று அங்கு தீவிர சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.
பருவமழை தீவிரமடைந்தால் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி போன்ற சிறிய கிராமங்களில் அதி பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் தரைமட்டமானது. அங்கு வசித்து வந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கின. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 413 பேர் உயிரிழந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட 1968 பேர் 16 முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உறவினர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் முகாம்களில் உள்ளவர்களை மறுவாழ்வுக்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வயநாடு நிலச் சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணி பத்தாவது நாளாக நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் நேற்று சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}