கேரளா நிலச்சரிவு: நிவாரண பணிகளுக்கு ரூ.50 லட்சம் கொடுத்த சூர்யா, ஜோதிகா, கார்த்தி!

Aug 01, 2024,04:39 PM IST

சென்னை: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் நிவாரணமாக ரூ.50 லட்சம் கொடுத்துள்ளனர். 


கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ம் தேதி  கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இந்த நிலச்சரிவில் 3 கிராமங்கள் அடியோடு காணாமல் போயுள்ளன. மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. 




நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. மாநில அரசின் பேரிடர் மீட்பு படைகள், தேசிய பேரிடர் மீட்பு படைகள் களத்தில் இறங்கி தீவிரமாக மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய 150க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். 


குவியும் நிதியுதவி


கேரள நிலச்சரிவுக்கு நிவாரண நிதி வழங்குமாறு அந்த மாநில முதல்வர் பிணராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழ்த் திரையுலகிலிருந்து முதல் ஆளாக நடிகர் விக்ரம் ரூ. 50 லட்சம் நிவாரண உதவியை அறிவித்திருந்தார். 


தற்போது பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி  ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!

news

SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்

news

சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!

news

இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!

news

திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

news

நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை

அதிகம் பார்க்கும் செய்திகள்