சூச்சிப்பாறை அருவிப் பகுதியில்.. 5 நாளாக சிக்கித் தவித்த.. 3 இளைஞர்களும் பத்திரமாக மீட்பு

Aug 03, 2024,03:53 PM IST

வயநாடு : கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களைத் தேடிப் போய் சூச்சிப்பாறை அருவிப் பகுதியில், சிக்கிக் கொண்ட 3 இளைஞர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.


கேரள மாநில வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். தொடர்ந்து 5 நாட்களாக வயநாட்டில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 346 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 250 க்கும் அதிகமானவர்களை காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.




தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், கேரளாவில் இன்னும் மழை குறைந்த பாடில்லை. மண்ணில் புதைந்த பலரது உடல்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களின் உடல்களை மோப்ப நாய்கள், ஜிபிஎஸ் ஆகியவற்றின் உதவியுடன் மீட்கும் பணிகளும் நடந்து வருகிறது.


இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடி மலப்புரத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சூச்சிப்பாறை அருவிப் பகுதிக்குச் சென்று அங்கிருந்து திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.  பாறைகளின் மீது ஏறி தங்கி உயிர் தப்பியுள்ளனர். தொடர்ந்து தங்களைக் காக்க மீட்புப் படையினர் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திரு்நதனர். இவர்களை 5 நாட்களுக்கு பிறகு தான் கடலோர காவல் படையினர் கண்டறிந்துள்ளனர். சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாறைகளின் மீது அமர்ந்து, 5 நாட்களாக உணவு தண்ணீர் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரையும் மீட்கும் பணிகள்  முடுக்கி விடப்பட்டது.


தற்போது இந்த மூ்ன்று பேரையும் கயிறு மூலமாக மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு ராணுவ  மீட்புப் படையினர் கொண்டு வந்தனர். பின்னர் 3 பேரும் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து மீட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்