பெங்களூரு: பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ குறித்த விவகாரத்தில் எங்களது பெயர்களை ஏன் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ரேவண்ணா குடும்பப் பிரச்சினை. இதில் எங்களுக்குத் தொடர்பில்லை என்று முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவரம், பிரஜ்வால் ரேவண்ணாவின் சித்தப்பாவுமான எச். டி.குமாரசாமி கூறியுள்ளார்.
ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளரான பிரஜ்வால் ரேவண்ணா, பெண்களை தவறாகப் பயன்படுத்தி ஆபாச கோலத்தில் வீடியோ எடுத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர் ஜெர்மனிக்குத் தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரஜ்வாலின் சித்தப்பாவான குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான வீடியோக்களை வெளியிட்டது யார்.. தேர்தலுக்கு முன்பு அதை வெளியிட்டது யார்.. அப்படி வெளியிட என்ன காரணம்.. பழைய விவகாரத்தை தேர்தல் சமயத்தில் கிளற என்ன காரணம். எஸ்ஐடி அமைத்திருக்கிறார்கள். அவர்கள் விசாரிக்கட்டும், உண்மை வெளி வரட்டும். தவறு செய்தவர்கள் சட்டப்படியான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
ஹசன் தேர்தலில் எங்களது வேட்பாளர் (பிரஜ்வால் ரேவண்ணா) வெற்றி பெறுவார். இதை நான் சொல்லவில்லை. எல்லோரும் சொல்கிறார்கள்.
நான் காங்கிரஸ் காரர்களைப் பார்த்துக் கேட்பது, எதற்காக இந்த விவகாரத்தில் குடும்பப் பெயரை இழுக்கறீர்கள். இது ஒரு குடும்பப் பிரச்சினை கிடையாது. தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்டது. இதில் எங்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. இது ரேவண்ணா குடும்பத்தின் பிரச்சினை. அதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் தனியாக வசிக்கிறார்கள் என்றார் குமாரசாமி.
குழந்தை
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
{{comments.comment}}