நாங்கள் டீம் "INDIA".. அதிர வைத்த பிசிசிஐ டிவீட்!

Sep 06, 2023,10:45 AM IST
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரத் என்று பெயர் மாற்ற வேண்டும். ஜெய்ஷாவும், இந்திய கிரிக்கெட் வாரியமும் இதைச் செய்ய வேண்டும் என்று வீரேந்திர ஷேவாக் கோரிக்கை வைத்த நிலையில் "நாங்கள் டீம் இந்தியா" என்று பிசிசிஐ வெளியிட்ட டிவீட் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என்று சிலர் கிளம்பியுள்ளனர். ஜி20 மாநாட்டுக்கு வருவோரை விருந்துக்கு அழைக்கும் குடியரசுத் தலைவரின் அழைப்பில் பாரத குடியரசுத் தலைவர் என்ற வார்த்தை இடம் பெற்றதால் பெரும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.





இதை வைத்து பல்வேறு மாநில ஆளுநர்கள், பாஜக முதல்வர்கள் உடனடியாக பாரத் என்ற பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். பாஜகவினரோ ஒரு படி மேலே போய் எதெல்லாம் பாரத் என்று மாற்றப்படவுள்ளது என்று லிஸ்ட் போட்டு சிலாகிக்க ஆரம்பித்து விட்டனர். 

இந்த சிலாகிப்பு குழுவில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீரேந்திர ஷேவாக்கும் இணைந்துள்ளார். அவர் போட்ட டிவீட்டில், இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரத் என்பதுதான் நமது நாட்டின் உண்மையான பெயர். அந்தப் பெயரை நாம் திரும்பப் பெற இத்தனை கால தாமதமாகி விட்டது. நான் ஜெய்ஷாவையும், இந்திய கிரிக்கெட் அணியையும் கேட்டுக் கொள்வதெல்லாம், நமது அணியின் பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பதே. உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின்போது நமது வீரர்கள் பாரத் என்ற பெயரை நெஞ்சில் தாங்கியிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து பலரும் ஷேவாக்கைக் கலாய்த்து வருகின்றனர். அப்படியென்றால் இதுவரை இந்தியா என்ற பெயரால் உங்களுக்கு எந்த கெளரவமும் சேரவில்லையா என்று கேட்டு வருகின்றனர். 

இப்படிப்பட்ட நிலையில் பிசிசிஐ நேற்று இரவு போட்ட ஒரு டிவீட் சலசலப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  உலகக் கோப்பை கிரிக்கெட் அணி தொடர்பாக ஒரு டிவீட் போட்டிருந்தது பிசிசிஐ. அதில் நாங்கள் டீம் இந்தியா என்று கூறியிருந்தது.  இந்த டிவீட்டிலும் வந்து "இந்தியர்களும்", "பாரதியர்களும்" மாறி மாறி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வீரேந்திர ஷேவாக் போல அவசரப்பட்டு பெயரை மாற்ற பிசிசிஐ தயாராக இல்லை போலும்!

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்