சென்னை: கேப்டன் விஜயகாந்த், மேலும் பல வருடங்கள் வாழ்ந்து நம்மையும் வாழ வைப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மறைந்திருப்பது பெரும் வேதனை அளிக்கிறது என்று நடிகை சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயாந்த் மறைவிற்கு சினிமா, அரசியல் என்று இல்லாமல், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் இவ்வளவு விஷயங்கள் செய்திருக்கிறார் என்றால் மிகவும் வியப்பு ஏற்படுகிறது.
பணம் இருந்தும் பணத்தின் மீது விருப்பு இல்லாமல், மனிதனின் மணங்களை உணர்ந்து இவ்வளவு செய்திருக்கிறார்.பலனை எதிர்பார்க்காமல் இவர் செய்த தொண்டு மிகப்பெரியது. கேப்டன் சார் உங்ளுக்கு இளைய தலைமுறையினர் சார்பாக வணக்கங்கள் கோடி என்று பலரும் நெகிழ்ந்து கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் உருக்கமான பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கேப்டன் விஜயகாந்த் சார்.. அவருக்கு இந்த நிலை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல வருடங்கள் அவர் வாழ்ந்து எங்களையும் வாழ வைப்பார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் இறந்ததை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
என்னைப் பொறுத்தவரை நான் ஓர் இளம் நாயகி.. என்னிடம் மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டதுண்டு. கேப்டன் இருந்த காலகட்டத்தில் சினிமா தலை சிறந்து விளங்கியது. பெண்களுக்கும் பாதுகாப்பாக நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன்கள் முதல் கதாநாயகன் வரை அனைவரையுமே சமமாக நடத்துவற்கு காரணமானவர் கேப்டன். இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என நம்புகிறோம். கேப்டனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}