பல வருடங்கள் வாழ்ந்து நம்மை வாழ வைப்பார் என்று எதிர்பார்த்தோம்.. சாக்ஷி அகர்வால்  சோகம்

Dec 29, 2023,01:45 PM IST

சென்னை:  கேப்டன் விஜயகாந்த், மேலும் பல வருடங்கள் வாழ்ந்து நம்மையும் வாழ வைப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மறைந்திருப்பது பெரும் வேதனை அளிக்கிறது என்று நடிகை சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.


தேமுதிக தலைவர் விஜயாந்த் மறைவிற்கு சினிமா, அரசியல் என்று இல்லாமல், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் இவ்வளவு விஷயங்கள் செய்திருக்கிறார் என்றால் மிகவும் வியப்பு ஏற்படுகிறது. 


பணம் இருந்தும் பணத்தின் மீது விருப்பு இல்லாமல், மனிதனின் மணங்களை உணர்ந்து இவ்வளவு செய்திருக்கிறார்.பலனை எதிர்பார்க்காமல் இவர் செய்த தொண்டு மிகப்பெரியது. கேப்டன் சார் உங்ளுக்கு இளைய தலைமுறையினர் சார்பாக வணக்கங்கள் கோடி என்று பலரும் நெகிழ்ந்து கூறுகிறார்கள்.


இந்த நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் உருக்கமான பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




கேப்டன் விஜயகாந்த் சார்.. அவருக்கு இந்த நிலை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல வருடங்கள் அவர் வாழ்ந்து எங்களையும் வாழ வைப்பார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் இறந்ததை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 


என்னைப் பொறுத்தவரை நான் ஓர் இளம் நாயகி.. என்னிடம் மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டதுண்டு. கேப்டன் இருந்த காலகட்டத்தில் சினிமா தலை சிறந்து விளங்கியது. பெண்களுக்கும் பாதுகாப்பாக நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார்.


படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன்கள் முதல் கதாநாயகன் வரை அனைவரையுமே சமமாக நடத்துவற்கு காரணமானவர் கேப்டன். இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என நம்புகிறோம். கேப்டனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்