சென்னை: வங்கக் கடல் காற்றழுத்தத் தாழ்வானதா புயலாக மாறும் கோணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று வட தமிழ்நாட்டில் பெரிதாக மழை இருக்காது என்றும், காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறியதும் மழை பெய்யத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் குறைந்த காற்றவுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது அடுத்து கட்டமாக தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த மண்டலமாகவும் மாறி, அடுத்து புயலாக உருவெடுக்கும். புயலாக மாறும்போது இதற்கு மிச்சாங் என்று பெயரிடப்படும்.
தற்போது வட தமிழ்நாட்டில் பெரிதாக மழை இல்லை. இரவில் சற்று பெய்தது. காலையில் அலுவலகம் போகும் நேரத்தில் சிறிது நிமிட மழை இருக்கிறது. மற்றபடி இன்று பெரிதாக மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். புயலானது இப்போதுதான் உருவாக்கத்தில் இருக்கிறது. மேகக் கூட்டங்கள் ஒன்றிணைந்து இறுகப் பற்றி புயலாக வலுவெடுத்ததும்தான் நமக்கான மழை குறித்து கணிக்க முடியும்.
புயல் சின்னம் நகரும் திசை குறித்து இன்று தெளிவாகத் தெரிந்து விடும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். புயல் சின்னமானது வலுவடைந்து புயலாக மாறியதும் மழை அதிகரிக்கத் தொடங்கும். புயலானது புதுச்சேரிக்கும், தெற்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் இடையே வட தமிழ்நாட்டில் கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அது சென்னையில் கரையைக் கடக்குமா அல்லது சென்னைக்கு அருகே கரையைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}