ஈரோடு: ஈரோடு மதிமுக எம்பி ஆக உள்ள கணேசமூர்த்தி உடல்நிலை குறித்து பல்வேறு வகையான தகவல்கள் பரவி வருவதால் மதிமுக வட்டாரம் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
ஈரோடு தொகுதி எம்பி யாக இருப்பவர் கணேசமூர்த்தி. இவர் மதிமுகவை சேர்ந்தவர். கடந்த 2019 தேர்தலில் இவர் திமுக கூட்டணியில் இடம் பெற்று உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த தொகுதியை திமுக தானே எடுத்துக் கொண்டு விட்டது. அதற்கு பதிலாக வேறு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசமூர்த்தி தனக்கு மீண்டும் எம்பி சீட் கிடைக்காது என்று அதிர்ச்சியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென உடல்நல குறைவு காரணமாக வீட்டுக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கோவையில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணேசமூர்த்தி உடல்நிலை குறித்து பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் உள்ளது. இருப்பினும் இது குறித்து உறுதியான எந்த விதமான தகவலையும் யாரும் இதுவரை வெளியிடவில்லை. சீட் கிடைக்காத அதிருப்திலும் மனவேதனையிலும் கணேசமூர்த்தி இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மதிமுகவிலிருந்து பல மூத்த தலைவர்கள் வெளியேறிய போதிலும் கூட வைகோவுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வருபவர் கணேசமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மதிமுக என்றால் இவர்தான் நினைவுக்கு வருவார். இந்த நிலையில் கணேசமூர்த்தியின் உடல் நல பாதிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}