ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க.. ராமர் என்ன செய்தார் தெரியுமா?

Jan 21, 2024,12:12 PM IST

தனுஷ்கோடி : தமிழ்நாடு  வந்துள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தை தொடர்ந்து தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவில் ஜனவரி 21ம் தேதியான இன்று காலை சுவாமி தரிசனம் செய்ததுடன், அங்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார். ராமேஸ்வரத்துக்கும், தனுஷ்கோடிக்கும், ராமருக்கும் நிறைய தொடர்பு உள்ளது. 


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ம் தேதி முதல் 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். அதிகாலை 04.30 மணிக்கு எழுந்து யோகா, தியானம், மந்திர ஜபம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். பழங்கள், இளநீர் மட்டுமே அவர் உணவாக எடுத்து வருகிறார். இரவில் தரையில் மரப்பலகையின் மீது யோகா விரிப்பை விரித்தே அவர் படுத்து உறங்கி வருகிறார். 


ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தென்னிந்தியாவில் உள்ள முக்கிய வைணவ தலங்களில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்து வருகிறார். ஜனவரி 20ம் தேதியான நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, கம்ப ராமாயண பாராயணத்தை கேட்டு மகிழ்ந்த மோடி, தொடர்ந்து ராமேஸ்வரம் ராமதநாதசுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். 




சரி ராமேஸ்வரத்துக்கும், தனுஷ்கோடிக்கும்.. கடவுள் ராமருக்கும் என்ன தொடர்பு உள்ளது? நிறைய தொடர்பு இருக்கு.


ராமாயணத்தின் படி, வேதங்களை கற்றறிந்த பிராமணனான ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மாபாதகங்களை செய்தவர்களுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக சீதா, லட்சுமணன், அனுமனுடன் ராமேஸ்வரம் வந்த ஸ்ரீராமர், இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, தோஷ நிவர்த்தி பெற்றார். அது மட்டுமின்றி ராமருக்கும் ராமேஸ்வரம் தலத்திற்கும் பல நெருங்கிய தொடர்பு உண்டு. 


இப்படி நெருக்கமான தொடர்புகள் ராமருக்கும், ராமேஸ்வரத்துக்கும், தனுஷ்கோடிக்கும் இருப்பதால்தான் பிரதமர் நரேந்திர மோடியும் ராமேஸ்வரம் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.


ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, பிறகு 22 தீர்த்தங்களிலும் நீராடினார். அதன் பிறகு கோவிலுக்குள் சென்ற அவருக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, நேற்று இரவு ராமேஸ்வரத்திலேயே பிரதமர் மோடி தங்கினார். இன்று காலை தனுஷ்கோடியில் உள்ள கோதண்ட ராம சுவாமி கோவில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்து, பூஜை செய்து வழிபட்டார். 


இதைத் தொடர்ந்து அவர் அரிச்சல்முனைக்கும் சென்று வழிபட்டார். அரிச்சல்முனையில் இருந்து தான் ஸ்ரீராமர், ராமர் சேது பாலத்தை கட்டத் துவங்கினார் என சொல்லப்படுவதால் இங்கும் பிரதமர் மோடி சென்று தரிசித்தார். இந்த ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்குப் புறப்பட்டார். அங்கிருந்து அவர் டெல்லி செல்கிறார்.


சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்