பெங்களூரு: முன்னாள் கர்நாடக டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்துள்ளனர். கணவரைக் கொலை செய்த பின்னர், ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவியர் நடத்தி வரும் வாட்ஸ் ஆப் குரூப்பில் சாத்தானைக் கொன்று விட்டேன் என்று கூறி அவர் மெசேஜ் போட்டதும் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு இல்லத்தில் கொல்லப்பட்ட கர்நாடகாவின் முன்னாள் காவல் துறைத் தலைவர் ஓம் பிரகாஷ், மதிய வேளையில் தமது மனைவி பல்லவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சண்டையின்போது, கணவர் மீது பல்லவி மிளகாய்ப் பொடியைத் தூவி, அவரைக் கட்டிப்போட்டு, பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 68 வயதான ஓம் பிரகாஷை, கண்ணாடி பாட்டில் கொண்டும் தாக்கியுள்ளார் பல்லவி என்று சொல்லப்படுகிறது.
சொத்துப் பிரச்சினை தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவரைக் கொலை செய்த பின்னர் பல்லவி, மற்றொரு காவல்துறை அதிகாரியின் மனைவியிடம் தொலைபேசியில் பேசி, தனது கணவரை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்மணி, தனது கணவரிடம் அதைக் கூறியுள்ளார். அவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததும், போலீஸார் ஓம் பிரகாஷ் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந் பல்லவியையும் அவரது மகளையும் விசாரணைக்கு எடுத்தனர். இருவரிடமும் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடந்தது. ஓம் பிரகாஷின் மனைவி பல்லவியே முக்கிய குற்றவாளி என்று உறுதியானதும் அவரை போலீஸார் கைது செய்தனர். ஓம் பிரகாஷின் உடலில் வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் பல கத்திக் காயங்கள் காணப்படுகின்றன, மேலும் இந்த தாக்குதலில் இரண்டு கத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
ஏன் இந்த வெறிச் செயல்
ஓம் பிரகாஷ் சமீபத்தில் தனது உறவினர் பெயருக்கு ஒரு சொத்தை பெயர் மாற்றம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கும் பல்லவிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது, கடைசியில் அது கொலையில் போய் முடிந்து விட்டது. இந்த கொலையில் பல்லவியின் மகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஓம் பிரகாஷின் மகன் கார்த்திகேயா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகேயா அளித்த புகாரில், தனது தாயும் தங்கையும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனது தந்தையை கொலை செய்யப் போவதாக மிரட்டி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மிரட்டல்களுக்குப் பின்னர், ஓம் பிரகாஷ் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார். கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மகள் அவரைச் சந்தித்து திரும்பி வருமாறு
வற்புறுத்தியதால் அவர் மீண்டும் வந்துள்ளார். அதன் பிறகே தனது தந்தையைக் கொலை செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் கார்த்திகேயா.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}