சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் போர்க்கொடி உயர்த்திய மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது குழப்பமாக உள்ளது.
சென்னைக்கு வந்த அவர் நேற்று அரசியல் தலைவர்களை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒரு மணி நேரம் சந்தித்ததாக செய்திகள் வந்தன. ஆனால், அதை செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தனிப்பட்ட விஷயமாகவே சென்னைக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்க கட்சி தொடர்ந்து நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், நண்பர்கள் பலர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செங்கோட்டையன் போர்க்கொடியைத் தொடர்ந்து அவரது கட்சிப் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பின்னர் டெல்லி சென்ற அவர் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார். அதன் பின்னர் செங்கோட்டையன் அமைதியாகி விட்டார். இதனால் அவரது திட்டம் என்ன என்பது குழப்பமாகவே உள்ளது.
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}