சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் போர்க்கொடி உயர்த்திய மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது குழப்பமாக உள்ளது.
சென்னைக்கு வந்த அவர் நேற்று அரசியல் தலைவர்களை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒரு மணி நேரம் சந்தித்ததாக செய்திகள் வந்தன. ஆனால், அதை செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தனிப்பட்ட விஷயமாகவே சென்னைக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்க கட்சி தொடர்ந்து நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், நண்பர்கள் பலர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செங்கோட்டையன் போர்க்கொடியைத் தொடர்ந்து அவரது கட்சிப் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பின்னர் டெல்லி சென்ற அவர் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார். அதன் பின்னர் செங்கோட்டையன் அமைதியாகி விட்டார். இதனால் அவரது திட்டம் என்ன என்பது குழப்பமாகவே உள்ளது.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}