சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சமநிலையில் இருந்த தங்கம் விலை இன்று சற்று உயரத் தொடங்கியுள்ளது. ஐப்பசியில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்த்திருந்த தங்கத்தின் விலை இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ஏறாமல், இறங்காமல், சமநிலையில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்க சூழல் அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5,705 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45,640 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6223 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49784 ஆக உள்ளது.
தங்கம்தான் இப்படி உயர்ந்திருக்கிறது.. ஆனால் வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 76 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 608 ஆக உள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}