ஜெயிலர் படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Aug 13, 2023,10:51 AM IST

சென்னை : ஜெயிலர் படத்தின் வெற்றி, வசூல் பற்றிய தகவல்கள் ஒரு பக்கம் ஹாட் டாக்காக போய் கொண்டிருந்தாலும், இந்த படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பள தொகை பற்றிய தகவல் மற்றொரு புறம் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.


டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினியின் 169 வது படமாக ரிலீசாகி உள்ளது ஜெயிலர். ஆகஸ்ட் 10 ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வசூல் வேட்டை ஆடி வருகிறது. ரசிகர்களின் பெருத்த ஆதரவுடன் தொடர்ந்து 3 நாட்களாக திரும்பிய பக்கமெல்லாம் ஜெயிலர் படத்தை பற்றியே பேச வைத்துள்ளது. 2023 ம் ஆண்டு ரிலீசான படங்களிலேயே முதல் நாளே அதிகமாக வசூல் செய்து ஜெயிலர் முதலிடத்தில் இருந்து வருகிறது.




லேட்டஸ்ட் டாக் என்னவென்றால் ஜெயிலர் படத்திற்காக ரஜினி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தான். தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த படத்திற்காக ரஜினி ரூ. 110 கோடிகளை சம்பளமாக வாங்கினாராம். காவாலா பாடலுக்கு கலக்கல் நடனமாடியதுடன் ஒரு சில சீன்களிலும் நடித்த தமன்னாவிற்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.




காமியோ ரோலில் இரண்ட சீன்களில் மட்டும் நடித்த மோகன் லாலுக்கு ரூ.8 கோடியும், ஷிவ்ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷிராபிற்கு தலா ரூ.4 கோடிகளும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். யோகிபாபுவிற்கு ரூ.1 கோடி, ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.80 லட்சம், சுனிலுக்கு ரூ.60 லட்சம், வசந்த் ரவிக்கு ரூ.30 லட்சம், ரெடின் கிங்ஸ்லேவிற்கு ரூ.25 லட்சம், வில்லன் விநாயகனுக்கு ரூ.35 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




டைரக்டர் நெல்சனுக்கு விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்காக ரூ.8 கோடி சம்பளம் வழங்கிய சன் பிக்சர்ஸ், பீஸ்ட் படத்தை கமர்ஷியல் ஹிட் ஆக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படத்திற்கு ரூ.10 கோடியாக நெல்சனின் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாம். 


ஆனால் இதெல்லாம் ரொம்ப கம்மி, தலைவருக்கு இவ்வளவு கம்மியான சம்பளத்தையா சன் பிக்சர்ஸ் கொடுத்திருக்கும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மற்றொரு தகவலின் படி ரஜினிக்கு, ஜெயிலர் படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்