சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது போல, நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்று நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்துள்ளார் அவர்.
அயலான் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடிந்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படம் முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் நாளை மறுநாள் தீபாவளி அன்று வெளியாகிறது.
இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமரன் திரைப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பபட்டது. அதன்பின்னர் மாணவர்கள் கேட்க கேள்விக்கு சிவகார்த்திகேயன் உரையாற்றினார்.
அப்போது, ராணுவ உடைய கடைசியாக போட்டுவிட்டு அதன் நினைவாக உடையை வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டேன். உடையை விட முகுந்த் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த உடையை அணிந்த பிறகு சின்ன சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளது. படப்பிடிப்பு சீரியசாக இருக்கும். ஆனால், நான் கொஞ்சம் ஜாலியாக தான் இருப்பேன். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னால் முதலில் மனரீதியாக என்னை தயார் படுத்திக் கொண்டேன். பின்னர் உடலை தயார் செய்தேன்.
விஜய் டிவியில் இருக்கும்போதே சாய் பல்லவியை தெரியும். சாய் பல்லவி என்னை அண்ணா என்று அழைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்கவில்லை என்று பேசியிருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு கோட் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தது திரையுலகில் நடந்த ஒரு அழகான நிகழ்வு. ஒரு மூத்த நடிகருடன் இணைந்து நடித்தது அழகாக இருந்தது. அப்படிதான் நான் பார்க்கிறேன். நான் சினிமாவில் சாதிக்க வேண்டியதே இன்னும் நிறைய உள்ளது. அதை பற்றி பின்னர் பார்ப்போம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}