- மஞ்சுளா தேவி
சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உலுக்கி எடுத்து வரும் கன மழையை ஏற்படுத்தியுள்ள மிச்சாங் புயலானது தற்போது வடக்கில் நகர்கிறது. இருப்பினும் இன்று இரவு வரை சென்னைக்கு கன மழை உண்டு. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை வானிலை மையம் விளக்கியுள்ளது.
சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்சாங் புயல் சென்னைக்கு கிழக்குத் தென்கிழக்கில் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது தீவிர புயலாக வலுவடைந்து, தொடர்ந்து வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா கரையை ஒட்டி நகரும். பின்பு ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே, பபட்லா என்ற இடத்தில் நாளை முற்பகல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது அதி தீவிரமான புயலா கரையைக் கடக்கும் என்பதால் சேதம் மிகப் பெரிதாகவே இருக்கும்.

புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும். காலையில் 10 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்த நிலையில், தற்போது 8 கிலோமீட்டர் என்ற அளவுக்கு குறைந்து நகர்ந்து வருகிறது. புயலின் நகரும் வேகம் குறைந்ததால்தான் சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், மாவட்டங்களில் கன மழை தொடர்கிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}