சென்னைக்கு.. 90 கி.மீட்டர் தொலைவில் மிச்சாங்.. இரவு வரை மழை.. அடுத்து என்ன நடக்கும்?

Dec 04, 2023,05:42 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உலுக்கி எடுத்து வரும் கன மழையை ஏற்படுத்தியுள்ள மிச்சாங் புயலானது தற்போது வடக்கில் நகர்கிறது. இருப்பினும் இன்று இரவு வரை சென்னைக்கு கன மழை உண்டு. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை வானிலை மையம் விளக்கியுள்ளது.


சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்சாங் புயல் சென்னைக்கு கிழக்குத் தென்கிழக்கில் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 


இது தீவிர புயலாக வலுவடைந்து, தொடர்ந்து வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா கரையை ஒட்டி நகரும். பின்பு ஆந்திராவின்  நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே, பபட்லா என்ற இடத்தில் நாளை முற்பகல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது அதி தீவிரமான புயலா கரையைக் கடக்கும் என்பதால் சேதம் மிகப் பெரிதாகவே இருக்கும். 




புயல் கரையைக் கடக்கும்போது,  மணிக்கு 90 முதல் 100  கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும். காலையில் 10 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்த நிலையில், தற்போது 8 கிலோமீட்டர் என்ற அளவுக்கு குறைந்து நகர்ந்து வருகிறது. புயலின் நகரும் வேகம் குறைந்ததால்தான் சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், மாவட்டங்களில் கன மழை தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

news

இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்