சென்னைக்கு.. 90 கி.மீட்டர் தொலைவில் மிச்சாங்.. இரவு வரை மழை.. அடுத்து என்ன நடக்கும்?

Dec 04, 2023,05:42 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உலுக்கி எடுத்து வரும் கன மழையை ஏற்படுத்தியுள்ள மிச்சாங் புயலானது தற்போது வடக்கில் நகர்கிறது. இருப்பினும் இன்று இரவு வரை சென்னைக்கு கன மழை உண்டு. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை வானிலை மையம் விளக்கியுள்ளது.


சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்சாங் புயல் சென்னைக்கு கிழக்குத் தென்கிழக்கில் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 


இது தீவிர புயலாக வலுவடைந்து, தொடர்ந்து வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா கரையை ஒட்டி நகரும். பின்பு ஆந்திராவின்  நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே, பபட்லா என்ற இடத்தில் நாளை முற்பகல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது அதி தீவிரமான புயலா கரையைக் கடக்கும் என்பதால் சேதம் மிகப் பெரிதாகவே இருக்கும். 




புயல் கரையைக் கடக்கும்போது,  மணிக்கு 90 முதல் 100  கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும். காலையில் 10 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்த நிலையில், தற்போது 8 கிலோமீட்டர் என்ற அளவுக்கு குறைந்து நகர்ந்து வருகிறது. புயலின் நகரும் வேகம் குறைந்ததால்தான் சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், மாவட்டங்களில் கன மழை தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்