தெய்வமும் பெண்ணும்!

Apr 30, 2026,01:04 PM IST

- வே. ஜெயந்தி


எங்கும் கோயில்கள்

அம்மன் பெயரில்,

ஆனால்

வீடுகளில்

பெண்ணுக்கு

ஒரு மூலையும் இல்லை.


கர்ப்பகிரகத்தில்

அவள் சக்தி,

சமையலறையில்

அவள் கடமை.


பூமியைத் தாங்கும்

தாயை வணங்கினோம்,

ஆனால்

அவள் கருத்தைத் தாங்க

மனம் வளர்க்கவில்லை.




நீரை அருளும்

மாரியம்மன்,

நீதியை வழங்கும்

காளி

அவள் கோபம்

தெய்வீகம்.


அதே கோபம்

பெண்ணிடம் வந்தால்

“அடக்கம் இல்லை”

என்று தீர்ப்பு.


விரதம் இருந்தாள்,

பூஜை செய்தாள்,

விளக்கேற்றினாள்

ஆனால்

கேள்வி கேட்டால்

பாவி ஆனாள்.


வழிபாட்டில்

அவள் அவசியம்,

முடிவுகளில்

அவள் தேவையில்லை.

பெண்ணை

தெய்வமாக வைத்தோம்,

மனிதராக

வாழ விடவில்லை.


இப்போது

அம்மனிடம் கேட்கிறேன்

என்னை வணங்கும்

இந்த மனிதன்

என் மகளுக்கும்

உன் சக்தியை

அனுமதிப்பானா?


(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்