- வே. ஜெயந்தி
எங்கும் கோயில்கள்
அம்மன் பெயரில்,
ஆனால்
வீடுகளில்
பெண்ணுக்கு
ஒரு மூலையும் இல்லை.
கர்ப்பகிரகத்தில்
அவள் சக்தி,
சமையலறையில்
அவள் கடமை.
பூமியைத் தாங்கும்
தாயை வணங்கினோம்,
ஆனால்
அவள் கருத்தைத் தாங்க
மனம் வளர்க்கவில்லை.

நீரை அருளும்
மாரியம்மன்,
நீதியை வழங்கும்
காளி
அவள் கோபம்
தெய்வீகம்.
அதே கோபம்
பெண்ணிடம் வந்தால்
“அடக்கம் இல்லை”
என்று தீர்ப்பு.
விரதம் இருந்தாள்,
பூஜை செய்தாள்,
விளக்கேற்றினாள்
ஆனால்
கேள்வி கேட்டால்
பாவி ஆனாள்.
வழிபாட்டில்
அவள் அவசியம்,
முடிவுகளில்
அவள் தேவையில்லை.
பெண்ணை
தெய்வமாக வைத்தோம்,
மனிதராக
வாழ விடவில்லை.
இந்த மனிதன்
என் மகளுக்கும்
உன் சக்தியை
அனுமதிப்பானா?
(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!
{{comments.comment}}