மும்பை: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் ஆலோசனைகளில் இந்திய தேர்வுக் குழு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருந்த நிலையில் ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதட்டம் காரணமாக ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விராட் கோலி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியில் இடம் பெறக் கூடிய வீரர்களாக சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் குறித்த ஒரு பார்வை..
ஷர்துல் தாக்கூர் - சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பைத் தொடரில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளுக்கான தேசிய அணியில் மீண்டும் இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அவரது பன்முகத் திறமை, குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் அணிக்கு பக்க பலமாக இருக்கும்.
துருவ் ஜூரல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான விக்கெட் கீப்பர்களாக இருப்பார்கள். அதேசமயம், இஷான் கிஷன் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தாலும், அணியில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை.
ஷ்ரேயாஸ் ஐயர் பெயரும் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆரம்பத்தில் அவர் அணியின் திட்டத்தில் இல்லாவிட்டாலும், விராட் கோலியின் ஓய்வு, ஷ்ரேயாஸ் ஐயரின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
இளம் வீரர் சாய் சுதர்சன் இன்னொரு முக்கிய வீரராக பரிசீலனையில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கி ரன்களைக் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன். நான் தேர்வுக் குழுவில் இருந்தால் நிச்சயம் சாய் சுதர்சனை தேர்வு செய்வேன் என்று முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சுதர்சனை பாராட்டிக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்பக்கூடிய தகுதியான வீரராக அவர் பலராலும் பார்க்கப்படுகிறார்.
முகேஷ் குமார் மற்றும் யாஷ் தயால் ஆகியோரும் அணியில் இடம் பெறக்கூடும், அதே நேரத்தில் கலீல் அகமது தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். முகமது ஷமியும் அணியில் இடம் பெறுவதும் தற்போது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
தீவிரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தான் பிழைக்கும்.. இல்லாவிட்டால்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி பேச்சு
மக்களே என்ஜாய்..தமிழ்நாட்டில் இன்றும், 14, 15 ,16, தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!
Heart Breaking News: விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு!
விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் இங்கிலாந்து போகும் இந்திய அணி.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?
Madurai Chithirai Thiruvizha: பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
கோவையில் நடைபெற இருந்த.. இசைஞானி இளையராஜா இசை கச்சேரி..மே 31 தேதிக்கு ஒத்திவைப்பு..!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு புதிய சிக்கல்.. படத்திற்கு தடை கோரி பாஜக வழக்கு..!
அடிக்குது வெயிலு.. கோடைக் கொடுமையை சமாளிக்க.. சூப்பரான நுங்கு.. ஜில் ஜில் நன்மைகள்!
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்... சவரனுக்கு ரூ.1320 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}