யாருங்க இவங்க?.. சசிகலா பக்கத்தில் நின்று.. அவர் பேசப் பேச.. டொய்ங் டொய்ங்னு தலையாட்டிய பெண்!

Jun 18, 2024,10:42 AM IST

சென்னை:   சசிகலா சீரியஸாக, கோபமாக, ஆவேசமாக, ஆதங்கத்தோடு பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டு சிரித்தபடியும், கண்களை அசைத்தபடியும், விதம் விதமாக ரியாக்ஷன் கொடுத்த பெண் இப்போது வைரலாகி விட்டார். அவர் ஏற்கனவே இதுபோல தலையாட்டிய பழைய வீடியோவையும் சேர்த்து, கூடவே பாட்டுக்களையும் கோர்த்து சமூக வலைதளங்களில் மீம் மெட்டீரியல் ஆக்கி விட்டனர்.


ஒரிஜினலை விட சில நேரங்களில் அதை ரீகிரியேட் செய்யும்போது பாப்புலராகி விடும். ஒரிஜினலை விட அது பாப்புலராக மாறியிருக்கும். சந்திரமுகி படத்தில் என்ன கொடுமை சரவணன் என்ற வசனத்தை பிரபு பேசியிருப்பார். அது பிரபலமானது. ஆனால் பிரேம்ஜி வந்து என்ன கொடுமை சார் இது என்று ரீகிரியேட் செய்தது இன்று வரை உச்சத்தில் உள்ளது. என்ன கொடுமை என்றாலே அது பிரேம்ஜி என்று ஆகி விட்டது அந்த ரீ கிரியேஷன்.


இதேபோலதான் ரஜினிகாந்த் பேசிய வசனம் கெட்ட பய சார் இந்தக் காளி.. அதே வசனத்தை சந்தானம் பேசியதும் அது பாப்புலரானது. குறிப்பாக இந்தக் காலத்து ஜெனரேஷனுக்கு கெட்ட பய சார் காளி என்றாலே அது சந்தானம் வசனம் என்று சொல்லும் அளவுக்கு பாப்புலர்.


சமீபத்தில் கூட மாமன்னன் படத்தில் ஒரு சம்பவத்தை மக்கள் பார்த்தார்கள். கதைப்படி அந்தப் படத்தின் ஹீரோ வடிவேலுதான். அதுதான் பாராட்டவும் பட்டது. ஆனால் திடீரென ஒரு தலைகீழ் மாற்றமாக வில்லனாக நடித்த பஹத் பாசில் பயங்கரமாக பாப்புலராகி விட்டார். அவரது கேரக்டரையும், அவர் பேசிய வசனத்தையும், அவரது நடிப்பையும் வச்சுப் புகழ ஆரம்பித்து விட்டது சமூகம்..  காரணம், பஹத் பாசிலின் பெர்பார்மன்ஸ்.




இப்படி ஒரு சைட் பெர்பார்மன்ஸ் இப்போது மீண்டும் கலகலப்பைக் கூட்டியுள்ளது. இது நிஜத்தில் நடந்த சம்பவம்.. மறைந்த ஜெயலலிதாவின் உற்ற தோழியாக வலம் வந்தவர் சசிகலா. சமீப காலமாக அவர் மீண்டும் அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார். நேற்று அவர் தனது உக்கிரமான முகத்தைக் காட்டினார். படு ஆவேசமாக பிரஸ் மீட்டில் பேசினா். திமுக அரசை கடுமையாக சாடினார். அதிமுகவில் நான் ரீ என்ட்ரி கொடுத்துட்டேன் என்று கூறினார். 


இதெல்லாம் மேட்டரே இல்லை.. என்னாயிப் போச்சுன்னா.. சசிகலா கோபமாக, ஆவேசமாக, ஆதங்கமாக, கடுப்பாக பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு அருகே நின்றிருந்த ஒரு பெண்மணி தலையை ஆட்டிபடியே இருந்தார். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல இருந்தது அவர் தலையாட்டிய விதம். வெறுமனே தலையாட்டவில்லை.. சசிகலா பேச்சுக்கேற்றவாறு ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டே தலையாட்டினார். புருவத்தை உயர்த்துவது, நமட்டுச் சிரிப்பு சிரிப்பு, பாரேன் என்பது போல பெருமிதம் காட்டுவது என்று அவர் டக் டக்கென்று ரியாக்ஷன் காட்டியதைப் பார்த்து பலரும் ஆச்சரியமாகி விட்டனர். இந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.


இவர் இதற்கு முன்பும் கூட சசிகலா பேசும்போது தலையாட்டி தலையாட்டி ரியாக்ஷன் கொடுத்துள்ளார் போல. அதையும் இப்போது கொண்டு வந்து வைரலாக்கிக் கொண்டுள்ளனர். சும்மா சொல்லக் கூடாது.. செம க்யூட்டாக ரியாக்ஷன் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி. 


யாருங்க இந்தப் பெண்.. என்றுதான் இப்போது பலரும்  கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற சைடு பெர்பார்மர்களை பேட்டி எடுப்பதற்கென்றே 2 யூடியூப் சானல்கள் இருக்கே.. அதில் ஏதாவது ஒன்றில் இவர் சீக்கிரமே வந்து பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்.. காத்திருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்