டில்லி : பாஜக.,வின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா, இன்று புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். இதனால் பாஜக., விற்கு தேசிய தலைவர் இனி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக., கொள்கையின் படி ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டும். அதனால் தான் இதற்கு முன் பாஜக.,வின் தேசிய தலைவர்களாக இருந்த ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அமித்ஷா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்ட போது தங்களின் கட்சி தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டனர்.
குஜராத் பிரதமராக இருந்த நரேந்திர மோடி, தேசிய அரசியலுக்கு வந்து பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டு, 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான போது ராஜ்நாத் சிங், பாஜக.,வின் தேசிய தலைவராக பதவி வகித்தார். அதன் பிறகு மோடி 2.ஓ- வின் போது அமித்ஷா கட்சியின் தேசிய தலைவராக இருந்தார். பின்னர் அமித்ஷாவிற்கு உள்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டு, தேசிய தலைவர் பதவி ஜே.பி.நட்டாவிற்கு வழங்கப்பட்டது.

இன்று பதவியேற்றுள்ள மோடி 3.ஓ அமைச்சரவையில் பாஜக தேசிய கட்சி தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதனால் கட்சியின் புதிய தலைவர் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
கட்சியின் புதிய தேசிய தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் கவுகானுக்கு தான் தேசிய தலைவர் பதவி கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அவரும் இன்றும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் விதிஷா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கட்டாரும் அமைச்சராகி விட்டார்.
பாஜக.,வின் தேசிய தலைவர் யார் என்பது விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}