மத்திய அமைச்சரானார் ஜே.பி.நட்டா.. அப்போ... பாஜக.,வின் புதிய தேசிய தலைவர் பதவி யாருக்கு ?

Jun 09, 2024,10:29 PM IST

டில்லி : பாஜக.,வின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா, இன்று புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். இதனால் பாஜக., விற்கு தேசிய தலைவர் இனி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


பாஜக., கொள்கையின் படி ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டும். அதனால் தான் இதற்கு முன் பாஜக.,வின் தேசிய தலைவர்களாக இருந்த ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அமித்ஷா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்ட போது தங்களின் கட்சி தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டனர். 


குஜராத் பிரதமராக இருந்த நரேந்திர மோடி, தேசிய அரசியலுக்கு வந்து பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டு, 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான போது ராஜ்நாத் சிங், பாஜக.,வின் தேசிய தலைவராக பதவி வகித்தார். அதன் பிறகு மோடி 2.ஓ- வின் போது அமித்ஷா கட்சியின் தேசிய தலைவராக இருந்தார். பின்னர் அமித்ஷாவிற்கு உள்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டு, தேசிய தலைவர் பதவி ஜே.பி.நட்டாவிற்கு வழங்கப்பட்டது. 




இன்று பதவியேற்றுள்ள மோடி 3.ஓ அமைச்சரவையில் பாஜக தேசிய கட்சி தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதனால் கட்சியின் புதிய தலைவர் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.


கட்சியின் புதிய தேசிய தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் கவுகானுக்கு தான் தேசிய தலைவர் பதவி கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அவரும் இன்றும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் விதிஷா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கட்டாரும் அமைச்சராகி விட்டார்.


பாஜக.,வின் தேசிய தலைவர் யார் என்பது விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. 

சமீபத்திய செய்திகள்

news

Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்