குடி அடிமையான கணவர்.. கோபத்துடன் போன மனைவி.. அதுக்குப் பிறகு பஸ் ஸ்டாண்ட்டில் என்ன நடந்துச்சுன்னா!

Aug 20, 2024,05:32 PM IST

கன்னியாகுமரி:   தக்கலை அருகே கணவன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி, நேராக தனது கள்ளக்காதலுடன் சென்று அவருடன் குடும்பம் நடத்தியது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மஞ்சாடி பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் மதுரையை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் நடந்த இந்த இரண்டு வருடங்களில் கணவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த இளம் பெண் தன் சொந்த ஊரான மதுரைக்கு போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 


இதனையடுத்து அந்த வாலிபர் மனைவியை மீண்டும் அழைத்து வர முடிவு செய்து மதுரைக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் ரயிலில் அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர் சற்று நேரம் கண்ணயர்ந்து தூங்கிவிட்டார். பின் கண் விழித்து பார்த்தபோது அருகில் இருந்த மனைவியும் குழந்தையும் காணவில்லை. அருகில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தக்கலை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.




இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பெண்ணின் செல்போன் நம்பர் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்தப் பெண் வெள்ளிச்சந்தையில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக வெள்ளிச்சந்தை பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.


தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கணவரிடம் கோபப்பட்டு மதுரைக்கு போவதாக கூறிய பெண் நாகர்கோவில் பஸ் நிலையம் வந்துள்ளார். அங்கு வெளிச்சந்தையில் வசித்து வந்த வாலிபர் ஒருவரை சந்தித்தார். இந்த சந்திப்பில் அந்தப் பெண் அந்த வாலிபரின் பேச்சுக்கு மயங்கி அவருடன் வாழ்வதற்கு முடிவு செய்தார். தொடர்ந்து வெள்ளிச் சந்தை பகுதிக்குச் சென்று கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பெண்ணிடம், கள்ளக் காதலனுடன் போக நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தார் .இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்