"என்னாது.. சமையலுக்கு தக்காளி யூஸ் பண்ணீங்களா".. கோச்சுக்கிட்டு போன மனைவி!

Jul 14, 2023,08:05 AM IST
போபால்: மத்தியப் பிரதேசத்தில்  ஒருவர் தக்காளியை பயன்படுத்தி சமையல் செய்துள்ளார். இதைக் கேட்டு கோபமடைந்த அவரது மனைவி, தக்காளி விற்கும் விலைக்கு அதைப் போட்டு ஏன் சமையல் செய்தீர்கள் என்று சண்டை போட்டு வீட்டை விட்டு போய் விட்டாராம்.

எனது மனைவியை கண்டுபிடித்து தாங்க என்று கூறி அந்த கணவர் தற்போது போலீஸாரை அணுகியுள்ளார். தக்காளி விலை உயர்வு எந்த அளவுக்கு மக்களைப் பாதித்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் பர்மன். இவர் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். இவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தனது மனைவி ஆர்த்தி பர்மனைக் காணவில்லை என்று கூறி புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொடுத்த புகார் மனுவில், எனது மகளுடன் பஸ் ஏறிப் போய் விட்டார் ஆர்த்தி பர்மன். அவரை கடந்த 3 நாட்களாக நான் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறியுள்ளார். சம்பவத்தன்று  சந்தீப் பர்மன் தனது உணவகத்தில் தக்காளியைப் பயன்படுத்தி ஏதோ டிஷ் செய்துள்ளாராம். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, தக்காளி விற்கிற விலைக்கு இதை ஏன் செய்தீர்கள் என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இந்த சண்டை முற்றி கடும் வாக்குவாதம் ஆகி அதில்தான் கோபித்துக் கொண்டு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாராம். தற்போது அவர் உமைரியா என்ற இடத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்குப் போயுள்ளது தெரிய வந்துள்ளது. அவரை சமாதானப்படுத்தி கூட்டி வரும் முயற்சிகளை போலீஸார் மேற்கொண்டனர். கணவன், மனைவியை போன் மூலம் பேச வைத்தனர்.

ஒரு தக்காளிக்கு இவ்வளவு அக்கப்போரா!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்