விடை பெற்றார் ஜஸ்டின்.. அடுத்த பிரதமர் யார்.. கனடாவை அடுத்து ஆளப் போவது ஒரு தமிழ்ப் பெண்?

Jan 07, 2025,06:01 PM IST

ஒட்டாவா:  கனடாவின் அடுத்த பிரதமராக ஒரு தமிழ்ப் பெண் பதவியேற்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 


கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்து விட்டார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  பிரதமராக பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. அதில் ஒருவர்தான் அனிதா ஆனந்த்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பிதான் அனிதா ஆனந்த். இவர் தற்போது ஜஸ்டின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார்.  இவரது பெயர் பிரதமர் பட்டியலில் முக்கியமாக அடிபடுகிறது.




2019ம் ஆண்டு முதல் முறையாக ஓக்வில்லியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனிதா ஆனந்த். பொது சேவைத் துறை அமைச்சராக 2019 முதல் 21 வரை பதவி வகித்துள்ளார். தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தனது துறையில் அமல்படுத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றார். 2024 செப்டம்பர் மாதம் முதல் இவர் போக்குவரத்து அமைச்சராக இருந்து வருகிறார். 


அனிதா ஆனந்த்தின் தந்தையின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவரது பெற்றோர் சென்னையில் பிறந்தவர்கள். தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர்.  அந்த வகையில் ஒரு தமிழச்சியாகவும், ஒரு பஞ்சாபியாகவும் வளர்ந்து வந்தவர் அனிதா. இந்த இரு இனமும் தனது இனம் என்று எப்போதுமே பெருமையாக அவர் சொல்வார். இதுகுறித்து ஒருமுறை அவர் கூறுகையில்,  நான் தமிழ், பஞ்சாபி என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்வேன். இரு பெரும் கலாச்சாரமும் மிகவும் பழமையானது, அழகானது. அப்படிப்பட்ட கலாச்சாரங்கள் என்னுடையது என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.


அனிதா ஆனந்த் பிரதமர் பதவிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அப்படி நடந்தால், உலகின் 2வது பெரிய நாடான கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமை அனிதாவுக்குக் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குடையை ரெடியா எடுத்து வச்சுக்கோங்க...தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வெளுக்குமாம்!

news

சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?

news

மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

news

20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்

news

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகளுக்கான ₹309 கோடி எங்கே... வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? : அண்ணாமலை கேள்வி!

news

கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்

news

துரைசிங்கம் Coming back?.. மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் சூர்யா.. ஆவேஷம் இயக்குநருக்காக!

அதிகம் பார்க்கும் செய்திகள்