ஒட்டாவா: கனடாவின் அடுத்த பிரதமராக ஒரு தமிழ்ப் பெண் பதவியேற்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்து விட்டார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமராக பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. அதில் ஒருவர்தான் அனிதா ஆனந்த்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பிதான் அனிதா ஆனந்த். இவர் தற்போது ஜஸ்டின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார். இவரது பெயர் பிரதமர் பட்டியலில் முக்கியமாக அடிபடுகிறது.
2019ம் ஆண்டு முதல் முறையாக ஓக்வில்லியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனிதா ஆனந்த். பொது சேவைத் துறை அமைச்சராக 2019 முதல் 21 வரை பதவி வகித்துள்ளார். தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தனது துறையில் அமல்படுத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றார். 2024 செப்டம்பர் மாதம் முதல் இவர் போக்குவரத்து அமைச்சராக இருந்து வருகிறார்.
அனிதா ஆனந்த்தின் தந்தையின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவரது பெற்றோர் சென்னையில் பிறந்தவர்கள். தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர். அந்த வகையில் ஒரு தமிழச்சியாகவும், ஒரு பஞ்சாபியாகவும் வளர்ந்து வந்தவர் அனிதா. இந்த இரு இனமும் தனது இனம் என்று எப்போதுமே பெருமையாக அவர் சொல்வார். இதுகுறித்து ஒருமுறை அவர் கூறுகையில், நான் தமிழ், பஞ்சாபி என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்வேன். இரு பெரும் கலாச்சாரமும் மிகவும் பழமையானது, அழகானது. அப்படிப்பட்ட கலாச்சாரங்கள் என்னுடையது என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.
அனிதா ஆனந்த் பிரதமர் பதவிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அப்படி நடந்தால், உலகின் 2வது பெரிய நாடான கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமை அனிதாவுக்குக் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
3வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் எவ்வளவு உயர்வு தெரியுமா?
கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!
SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!
திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்
{{comments.comment}}