விடை பெற்றார் ஜஸ்டின்.. அடுத்த பிரதமர் யார்.. கனடாவை அடுத்து ஆளப் போவது ஒரு தமிழ்ப் பெண்?

Jan 07, 2025,06:01 PM IST

ஒட்டாவா:  கனடாவின் அடுத்த பிரதமராக ஒரு தமிழ்ப் பெண் பதவியேற்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 


கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்து விட்டார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  பிரதமராக பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. அதில் ஒருவர்தான் அனிதா ஆனந்த்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பிதான் அனிதா ஆனந்த். இவர் தற்போது ஜஸ்டின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார்.  இவரது பெயர் பிரதமர் பட்டியலில் முக்கியமாக அடிபடுகிறது.




2019ம் ஆண்டு முதல் முறையாக ஓக்வில்லியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனிதா ஆனந்த். பொது சேவைத் துறை அமைச்சராக 2019 முதல் 21 வரை பதவி வகித்துள்ளார். தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தனது துறையில் அமல்படுத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றார். 2024 செப்டம்பர் மாதம் முதல் இவர் போக்குவரத்து அமைச்சராக இருந்து வருகிறார். 


அனிதா ஆனந்த்தின் தந்தையின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவரது பெற்றோர் சென்னையில் பிறந்தவர்கள். தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர்.  அந்த வகையில் ஒரு தமிழச்சியாகவும், ஒரு பஞ்சாபியாகவும் வளர்ந்து வந்தவர் அனிதா. இந்த இரு இனமும் தனது இனம் என்று எப்போதுமே பெருமையாக அவர் சொல்வார். இதுகுறித்து ஒருமுறை அவர் கூறுகையில்,  நான் தமிழ், பஞ்சாபி என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்வேன். இரு பெரும் கலாச்சாரமும் மிகவும் பழமையானது, அழகானது. அப்படிப்பட்ட கலாச்சாரங்கள் என்னுடையது என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.


அனிதா ஆனந்த் பிரதமர் பதவிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அப்படி நடந்தால், உலகின் 2வது பெரிய நாடான கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமை அனிதாவுக்குக் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!

news

மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

news

துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்