சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?

Sep 10, 2025,10:33 AM IST
சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றுள்ள வெற்றியானது, தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்குக் கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.+

சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது, பாராளுமன்றத்தில் NDA-வின் ஆதிக்கம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய குரலாகவும் மாறியுள்ளது. NDA-வின் வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது, தமிழ்நாட்டின் திராவிட சித்தாந்தத்தை ஒரு சங்கடமான நிலைக்கு தள்ளியது. இதற்கு பதிலடியாக, இந்தியா கூட்டணி தெலுங்கு வேட்பாளராக, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியை நிறுத்தியது. 

இதன் மூலம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள NDA கூட்டணி கட்சிகள் அதேபோன்ற தர்மசங்கடத்தை சந்திக்கும் என்று நம்பியது. ஆனால், தேர்தல் முடிவுகள் பிராந்திய ஒற்றுமை இறுதி முடிவில் பெரிய பங்கு வகிக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன. திராவிட அடையாளத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக, பாஜகவை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. பாஜக மட்டுமல்லாமல் காங்கிரஸாலும் கூட தமிழ்நாட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தேசிய கட்சிகளை ஏற்காத மன நிலையில்தான் தமிழ்நாடு மக்கள் இன்றளவும் உள்ளனர். அதை உடைக்கத்தான் பாஜக கடுமையாக முயல்கிறது. அதில் இதுவரை அக்கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைக்கவில்லை.



இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் மூலம் பாஜக மேற்கொண்டுள்ள முயற்சி, அரசியல் ஆதாயத்தை பெற்று தருமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கேரளாவில் சிறுபான்மையினர் அதிகமாக இருப்பதால், கூட்டணி இல்லாமல் பாஜகவால் அரசியல் ரீதியாக உயர முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் வடக்குக்கு எதிரான மனநிலை, பிராமண எதிர்ப்பு போன்ற தடைகள் உள்ளன. இதை பிராந்திய கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வடக்குடன் கலாச்சார தொடர்பு இல்லை என்று திராவிட கட்சிகள் கூறி வருகின்றன. 

அதேசமயம், பிரதமர் மோடியின் பாஜக, தமிழ்நாட்டை ஒரு சவாலாக பார்க்கிறது. இதற்காக வாக்காளர்களை கவர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவியது முதல், காசிக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான நாகரீக பிணைப்புகளை கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் ஆண்டு விழா வரை, சோழ பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழன்- கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் பிரார்த்தனை செய்தது வரை, பாஜக தமிழ் அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக தன்னை நிலை நிறுத்த முயற்சிக்கிறது.

ஆனால் இது மட்டும் போதுமானதாக இல்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய சவால்கள் உள்ளன. வட இந்திய கட்சிகளை மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. திராவிட சித்தாந்தம் இங்கு வலுவாக உள்ளது. பாஜகவை வளரவிடாமல் தடுக்க திராவிட கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. ஆனாலும், பாஜக தனது முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதேசமயம், பாஜகவின் கொள்கைகளே அதற்கு எதிராக இங்கு உள்ளன. அதை தமிழ்நாட்டு மக்கள் அறவே விரும்பாதவர்களாக உள்ளனர். இதை இன்னும் பாஜக புரிந்து கொண்டது போலத் தெரியவில்லை. அது புரியும்போதுதான் தமிழ்நாடும் பாஜக வசமாகும்.

கங்கை கொண்ட சோழபுரம் விஜயத்தின் போது, ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழனுக்கு உயரமான சிலைகள் அமைக்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். திராவிட கட்சிகள் பாண்டியர்கள், சோழர்கள் மற்றும் சேரர்கள் பற்றி பேசும் விதத்தில் இருந்து இது மாறுபட்டது. சோழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இப்படிப் பல வகையிலும் பாஜக தமிழ்நாட்டு மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இளையராஜாவுக்கு கெளரவ எம்.பி பதவி கொடுத்தது அதில் ஒரு முயற்சி. அதேபோலத்தான் இப்போது சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவியும் பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அதிக வேலை இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சவால்கள் உள்ளன. பாஜக ஒரு உயர் சாதி கட்சி என்று பரவலாக பார்க்கப்படுகிறது. ஆனால், மேற்கு தமிழ்நாட்டில் தனது ஆதரவை அதிகரித்துள்ளது. இங்கு கவுண்டர் சமூகத்தினரின் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது. மற்ற கட்சிகள் பிராமண எதிர்ப்பு அரசியலை பயன்படுத்தி பாஜகவை பின்னுக்கு தள்ளுகின்றன. இதனால் அதிமுகவுடனான கூட்டணி பாஜகவுக்கு முக்கியமானது.

பாஜக தனித்து போட்டியிட்டு 20 சதவீத வாக்குகளை பெற வேண்டும். அப்போதுதான் கூட்டணி கட்சிகள் உதவ முடியும். தமிழ்நாட்டில் 35 சதவீத வாக்குகளை பெறும் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். பாஜக இன்னும் அந்த இலக்கை அடையவில்லை. வளர்வதற்கு, ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும். அதிமுக பெரிய கட்சியாக இருந்தால் இது சாத்தியமில்லை. மேலும், கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக ஆட்சிக்கு வரும் என்பதை அதிமுக ஏற்க மறுக்கிறது.

பாஜக நீண்ட கால இலக்குகளை விட குறுகிய கால ஆதாயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அண்ணாமலையை தவிர வேறு வலுவான தலைவர்கள் இல்லை. திராவிட சித்தாந்தத்தை உடைக்க பாஜகவுக்கு அதிக முயற்சிகள் தேவை. பாஜக தமிழ்நாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், சவால்கள் நிறைந்த இந்த பயணத்தில் பாஜக வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்