பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற யூகங்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கட்சி மேலிடம்தான் எதையும் முடிவு செய்யும். எனவே தேவையில்லாத சிக்கல்களை உருவாக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி வகித்து வருகிறார். அவரை மாற்ற கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், அக்டோபரில் முதல்வர் மாற்றம் நிகழும் என்றும் ஒரு செய்தி வலம் வருகிறது. இதுகுறித்து கார்கேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பாருங்கள், அது மேலிடத்தின் கைகளில் உள்ளது. மேலிடத்தில் என்ன நடக்கிறது என்பதை இங்கு யாரும் சொல்ல முடியாது. இது மேலிடத்திடம் விடப்பட்டுள்ளது, மேலும் மேலிடத்திற்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. தேவையில்லாமல் யாரும் பிரச்சனை உருவாக்கக் கூடாது என்றார்.
2023 இல், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தலா 2.5 ஆண்டுகள் சுழற்சி முறையில் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வார்கள் என்ற ஊகங்கள் பரவலாக இருந்தன. இந்த ஏற்பாட்டை கட்சி இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. தற்போது சித்தராமையா முதல்வராகவும், சிவக்குமார் துணை முதல்வராகவும் உள்ளனர்.

இந்த அடிப்படையில்தான் சித்தராமையா மாற்றப்படப் போவதாக செய்திகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் எம்.எல்.சி.யுமான யதீந்திரா சித்தராமையா, தலைமை மாற்ற வதந்திகளை உறுதியாக மறுத்து, தனது தந்தை முழு ஐந்து ஆண்டு காலமும் முதல்வராகப் பணியாற்றுவார் என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய யதீந்திரா, சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் மற்றும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இருவரின் ஆதரவும் உறுதியாக உள்ளது. அரசு எந்தவித தடங்கலும் இல்லாமல் செயல்படுகிறது. மேலிடம் தலைமை மாற்றம் பற்றி பேசவும் இல்லை, அதற்கான எந்த அறிகுறியையும் கொடுக்கவும் இல்லை. என் தந்தை முழு ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார் என்று அவர் கூறினார்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}