மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ரூ. 50 கோடி வரை கொடுத்து தன் பக்கம் இழுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி தயாராக இருப்பதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார் ரோஹித் சர்மா. அதேசமயம், ஐபிஎல்லைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வாங்கிக் கொடுத்தவர். கடந்த சீசனில் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஹர்டிக் பான்ட்யா கேப்டனாக்கப்பட்டார். இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் கடும் அப்செட்டானார்கள்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் இப்போதே கிளம்பி விட்டன. குறிப்பாக சில முக்கியமான வீரர்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதில் பலரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மாவை மிகப் பெரிய தொகைக்கு வாங்க லக்னோ அணி தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ரூ. 50 கோடி வரை சம்பளம் கொடுக்க லக்னோ அணி ரெடியாக காத்திருக்கிறதாம். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவை வாங்கி விட்டால் கப்பு நிச்சயம் என்று லக்னோ திடமாக நம்புகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தியவர் ரோஹித் சர்மாதான். அவரது தலைமையில்தான் ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வலுவான அணியாக மும்பை இந்தியன்ஸ் இத்தனை காலமாக விளங்கி வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடும் டஃப் கொடுத்த ஒரே அணி மும்பைதான். அதற்குக் காரணம் ரோஹித் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி உலா வருவது குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், எந்தக் காரணமும் இல்லாமல் இந்த யூகங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. ஒரு வேளை ரோஹித் சர்மா வருகிறார் என்றே வைத்துக் கொள்வோம், ஒரு வீரருக்காக மொத்த அணியின் சம்பளத்தில் பாதியை அவருக்குக் கொடுத்து விட்டு, மற்ற 22 பேரையும் எப்படி நிர்வகிப்பது?
எல்லா அணிகளுக்குமே ஒரு விருப்ப பட்டியல் இருக்கும். சில வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இந்த கேப்டன் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று விரும்புவோம். அது நமது தனிப்பட்ட விருப்பம். அதேசமயம், என்ன கையில் இருக்கிறதோ அதுதான் எதார்த்தம். நீங்கள் விரும்புவதையெல்லாம் பெற்று விட முடியாது இல்லையா.. அது அணிகளுக்கும் பொருந்தும். எல்லோருமே நமக்குக் கிடைத்து விட மாட்டார்கள் என்றார் கோயங்கா.
கோயங்கா சொல்வதை வைத்துப் பார்த்தால் இது வதந்தியாகவே தெரிகிறது. ஆனால் அரசியல் போலத்தான் விளையாட்டும்.. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}