மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ரூ. 50 கோடி வரை கொடுத்து தன் பக்கம் இழுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி தயாராக இருப்பதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார் ரோஹித் சர்மா. அதேசமயம், ஐபிஎல்லைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வாங்கிக் கொடுத்தவர். கடந்த சீசனில் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஹர்டிக் பான்ட்யா கேப்டனாக்கப்பட்டார். இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் கடும் அப்செட்டானார்கள்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் இப்போதே கிளம்பி விட்டன. குறிப்பாக சில முக்கியமான வீரர்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதில் பலரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மாவை மிகப் பெரிய தொகைக்கு வாங்க லக்னோ அணி தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ரூ. 50 கோடி வரை சம்பளம் கொடுக்க லக்னோ அணி ரெடியாக காத்திருக்கிறதாம். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவை வாங்கி விட்டால் கப்பு நிச்சயம் என்று லக்னோ திடமாக நம்புகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தியவர் ரோஹித் சர்மாதான். அவரது தலைமையில்தான் ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வலுவான அணியாக மும்பை இந்தியன்ஸ் இத்தனை காலமாக விளங்கி வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடும் டஃப் கொடுத்த ஒரே அணி மும்பைதான். அதற்குக் காரணம் ரோஹித் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி உலா வருவது குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், எந்தக் காரணமும் இல்லாமல் இந்த யூகங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. ஒரு வேளை ரோஹித் சர்மா வருகிறார் என்றே வைத்துக் கொள்வோம், ஒரு வீரருக்காக மொத்த அணியின் சம்பளத்தில் பாதியை அவருக்குக் கொடுத்து விட்டு, மற்ற 22 பேரையும் எப்படி நிர்வகிப்பது?
எல்லா அணிகளுக்குமே ஒரு விருப்ப பட்டியல் இருக்கும். சில வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இந்த கேப்டன் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று விரும்புவோம். அது நமது தனிப்பட்ட விருப்பம். அதேசமயம், என்ன கையில் இருக்கிறதோ அதுதான் எதார்த்தம். நீங்கள் விரும்புவதையெல்லாம் பெற்று விட முடியாது இல்லையா.. அது அணிகளுக்கும் பொருந்தும். எல்லோருமே நமக்குக் கிடைத்து விட மாட்டார்கள் என்றார் கோயங்கா.
கோயங்கா சொல்வதை வைத்துப் பார்த்தால் இது வதந்தியாகவே தெரிகிறது. ஆனால் அரசியல் போலத்தான் விளையாட்டும்.. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}