திரும்ப வருமா?

Dec 27, 2025,03:25 PM IST

- J லீலாவதி


ஏற்றமும் இறக்கமும் உள்ளது வாழ்க்கை என 

உணர்த்தியது பரமபதம்

கூட்டலையும் பெருக்கலையும் விளையாட்டாய் 

கற்றுக் கொடுத்தது கிட்டிப்ல்

இலக்கையடைய சொல்லி கொடுத்தது தாயம்.

ஆக்கலும் அழித்தலும் நம்முள் உண்டு என 

உணர்த்தியது ஏழு கல்

போராடு என பொட்டில் செதுக்கியது சதுரங்கம் 

பொறுமையும் தனிமை நேரப் பெருமையும் 

பெற்றுத் தந்தது கண்ணாமூச்சி




ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் என 

நெறி ஊட்டியது நொண்டி

இருக்கும் இடத்திலிருந்து இல்லாதவிடத்திலும் 

நிரப்பும் குணம் பதித்தது பல்லாங்குழி

நண்பன் உயரம் போக 

முதுகும் தோளும் குனிந்து பனிந்து நிற்க 

சொல்லி கொடுத்தது பச்சை குதிரை

அதனால் தான் என்னவோ 

அந்த காலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை.

உண்மைதானா?


(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்