- J லீலாவதி
ஏற்றமும் இறக்கமும் உள்ளது வாழ்க்கை என
உணர்த்தியது பரமபதம்
கூட்டலையும் பெருக்கலையும் விளையாட்டாய்
கற்றுக் கொடுத்தது கிட்டிப்ல்
இலக்கையடைய சொல்லி கொடுத்தது தாயம்.
ஆக்கலும் அழித்தலும் நம்முள் உண்டு என
உணர்த்தியது ஏழு கல்
போராடு என பொட்டில் செதுக்கியது சதுரங்கம்
பொறுமையும் தனிமை நேரப் பெருமையும்
பெற்றுத் தந்தது கண்ணாமூச்சி

ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் என
நெறி ஊட்டியது நொண்டி
இருக்கும் இடத்திலிருந்து இல்லாதவிடத்திலும்
நிரப்பும் குணம் பதித்தது பல்லாங்குழி
நண்பன் உயரம் போக
முதுகும் தோளும் குனிந்து பனிந்து நிற்க
சொல்லி கொடுத்தது பச்சை குதிரை
அதனால் தான் என்னவோ
அந்த காலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை.
உண்மைதானா?
(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!
அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!
ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!
விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!
{{comments.comment}}