சென்னை: வாணி போஜன்.. சின்னத்திரை மூலம் இல்லந்தோறும் பெண்களின் மனதில் தனி இடம் பிடித்த இளவரசி!
முதலில் சின்ன திரையில் தடம் பதித்த வாணி போஜன், ஒரே சீரியலில் இல்லத்தரசிகள் அனைவரின் மனதையும் கவர்ந்தார். பலருக்கும் வாணி போஜன் என்றால் கூட சற்று யோசிப்பார்கள்.. ஆனால் சத்யா என்றால் தான் டக்கென்று தெரியும். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் தொடர் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்றவர் வாணி போஜன். மேலும் பல தொடர் கதைகளில் நடித்துள்ளார். சின்ன திரையின் நயன்தாரா என்றும் இவரை குறிப்பிட்டது உண்டு.. அந்த அளவுக்கு நடிப்பும், வசீகரமும் இணைந்தவர்.
பின்னர் திரைப்படங்களுக்கு மாறினார் வாணி போஜன். ஒரு இரவு, அதிகாரம் 79, மீக்கு மாத்ரமே செப்தா போன்ற தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் "மீரா" கதாபாத்திரம் மூலம் இளைஞர்களின் மனதையும் கொள்ளை அடித்தார்.
ஏர்லைன்சில் பணிப் பெண்ணாக, விண்வெளி தேவதையாக வலம் வந்த வாணி போஜன், தற்போது ரசிகர்கள் புடை சூழ திரையுலக தாரகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் ஷாக் கொடுத்தார்.
ஒரு கடை திறப்பு விழாவின்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது விஜய்யின் அரசியல் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது வாணி போஜன் கூறுகையில், தனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது என்று கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், செங்கலம் என்னும் வெப் தொடரில் நடித்தபோதே தனக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டதாகவும், தற்போதும் அரசியல் ஆர்வம் இருப்பதாகவும் கூறி தன் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளார்.
விஜய் அவர்களின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, வரவேற்கத்தக்கது என்றும், மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் . விஜய் அவர்களுக்கு தமிழக மக்கள் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார் வாணி போஜன்.
ஆஹா இது வேற லெவலா இருக்கே.. விஜய் தீவிர அரசியலில் இறங்கும்போது வாணி போஜனும் அவரது கட்சியில் இணைந்து கலக்குவாரா என்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஒரே சேர கிளம்பியுள்ளது. சீக்கிரமாகவே தலைவியா மாறிடுங்க மேடம்.. ரசிகர்கள் காத்திருக்காங்க!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
{{comments.comment}}