சென்னை: வாணி போஜன்.. சின்னத்திரை மூலம் இல்லந்தோறும் பெண்களின் மனதில் தனி இடம் பிடித்த இளவரசி!
முதலில் சின்ன திரையில் தடம் பதித்த வாணி போஜன், ஒரே சீரியலில் இல்லத்தரசிகள் அனைவரின் மனதையும் கவர்ந்தார். பலருக்கும் வாணி போஜன் என்றால் கூட சற்று யோசிப்பார்கள்.. ஆனால் சத்யா என்றால் தான் டக்கென்று தெரியும். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் தொடர் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்றவர் வாணி போஜன். மேலும் பல தொடர் கதைகளில் நடித்துள்ளார். சின்ன திரையின் நயன்தாரா என்றும் இவரை குறிப்பிட்டது உண்டு.. அந்த அளவுக்கு நடிப்பும், வசீகரமும் இணைந்தவர்.

பின்னர் திரைப்படங்களுக்கு மாறினார் வாணி போஜன். ஒரு இரவு, அதிகாரம் 79, மீக்கு மாத்ரமே செப்தா போன்ற தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் "மீரா" கதாபாத்திரம் மூலம் இளைஞர்களின் மனதையும் கொள்ளை அடித்தார்.
ஏர்லைன்சில் பணிப் பெண்ணாக, விண்வெளி தேவதையாக வலம் வந்த வாணி போஜன், தற்போது ரசிகர்கள் புடை சூழ திரையுலக தாரகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் ஷாக் கொடுத்தார்.
ஒரு கடை திறப்பு விழாவின்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது விஜய்யின் அரசியல் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது வாணி போஜன் கூறுகையில், தனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது என்று கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், செங்கலம் என்னும் வெப் தொடரில் நடித்தபோதே தனக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டதாகவும், தற்போதும் அரசியல் ஆர்வம் இருப்பதாகவும் கூறி தன் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளார்.
விஜய் அவர்களின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, வரவேற்கத்தக்கது என்றும், மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் . விஜய் அவர்களுக்கு தமிழக மக்கள் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார் வாணி போஜன்.
ஆஹா இது வேற லெவலா இருக்கே.. விஜய் தீவிர அரசியலில் இறங்கும்போது வாணி போஜனும் அவரது கட்சியில் இணைந்து கலக்குவாரா என்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஒரே சேர கிளம்பியுள்ளது. சீக்கிரமாகவே தலைவியா மாறிடுங்க மேடம்.. ரசிகர்கள் காத்திருக்காங்க!
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}