லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் அட்டகாசத்தால் அவற்றைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்டுள்ள நிலையில் மற்ற ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியா-நேபாள எல்லையான டெராய் பகுதியில் சமீபமாக காலமாக ஓநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த ஓநாய்கள் ஊருக்குள் நுழைந்து குழந்தைகளை குறி வைத்து கொன்று வருகிறது. கடந்த வாரம் உத்திரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் கூட்டம் தாக்குதலில் இறங்கியது. இந்த தாக்குதலில் ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் ஆப்ரேஷன் பேடியா என்பதை தொடங்கி இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அப்பகுதிகளில் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்து ஓநாய் பிடிக்க டிரெயின்கள், கேமராக்கள், உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் இதுவரை 4 ஓநாய்கள் பிடிபட்டுள்ளன.
இந்த நிலையில் மனித உயிர்களைக் கொன்று விழுங்கும் மற்ற ஓநாய்கள் தேடிப் பிடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் 12 பேரின் தலைமையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர் வனத்துறையினர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மோனிகா ராணி கூறுகையில், ஓநாய்களைப் பிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி அவை இடத்தை மாற்றி உலா வருகின்றன. இதனால் அவற்றின் நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. 5, 6 நாட்களுக்கு ஒருமுறை ஓநாய்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றன. வனத்துறை தீவிரமாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}