லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் அட்டகாசத்தால் அவற்றைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்டுள்ள நிலையில் மற்ற ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியா-நேபாள எல்லையான டெராய் பகுதியில் சமீபமாக காலமாக ஓநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த ஓநாய்கள் ஊருக்குள் நுழைந்து குழந்தைகளை குறி வைத்து கொன்று வருகிறது. கடந்த வாரம் உத்திரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் கூட்டம் தாக்குதலில் இறங்கியது. இந்த தாக்குதலில் ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் ஆப்ரேஷன் பேடியா என்பதை தொடங்கி இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அப்பகுதிகளில் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்து ஓநாய் பிடிக்க டிரெயின்கள், கேமராக்கள், உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் இதுவரை 4 ஓநாய்கள் பிடிபட்டுள்ளன.
இந்த நிலையில் மனித உயிர்களைக் கொன்று விழுங்கும் மற்ற ஓநாய்கள் தேடிப் பிடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் 12 பேரின் தலைமையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர் வனத்துறையினர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மோனிகா ராணி கூறுகையில், ஓநாய்களைப் பிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி அவை இடத்தை மாற்றி உலா வருகின்றன. இதனால் அவற்றின் நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. 5, 6 நாட்களுக்கு ஒருமுறை ஓநாய்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றன. வனத்துறை தீவிரமாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}