- கவிதா உடையப்பன், சேலம்
பணியினால் பிறந்தது மனஅழுத்தம்..
பணியினை மதிக்காததால்.. வந்தது வருத்தம்.
பொறுப்பேர்த்து நான் செய்த வேலையை
பார்வையிடாமல் புறம் தள்ளினர்.
ஆர்வமுடன் பணியாற்றிய என் உள்ளுணர்வை அங்கீகரிக்க மறுத்தனர்.
என்ன தெரியும் என்று கேட்டே வேலைக்கு அழைத்தனர் -
பிறகு தெரியாததையும் தோளில் சுமத்தினர்.
முயன்று கற்று முன்னேற துடித்தேன்.
முடிவில்லா தடைகள் விதித்தனர்.
பாராட்டுகளைப் பதுக்கினர்,
பணிஉயர்வை முடக்கினர்.
கால நேரம் இன்றி உழைத்தேன்,
ஆயினும்
இளையவளுக்கு கௌரவம் அளித்தனர்.
"ஏன்? " என வினவும் முன்னரே
"செயற்பாட்டு கணக்காய்வு" என பதிலளித்தனர்.
அறிந்தும் சதி செய்தனர்,
தெரிந்தும் அதையே செயலாக்கினர்.
"கடிகாரத்தின் கட்டுப்பாட்டில் நுழைய வேண்டும்" என்றனர்.
ஆனால் கடிகாரத்தையும் கடந்து உழைக்க வைத்தனர்.
உடல் ஓய்வை நாட,
மனம் இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது.
இலக்கை நோக்கி பாய்ந்தேன்,
வழக்கத்தை மீறி உழைத்தேன் -
ஆனால், கலக்கத்தின் கரையில் நின்றேன்.
ஊதியம் கிடைத்தது..
ஊக்கம் தொலைந்தது.
சிரிக்க மறந்தேன்,
சிந்தனையில் கரைந்தேன்.
வெற்றியை தேடினேன் - வெறுமையே மிஞ்சியது.
(பணிச்சுமையின் தாக்கத்தை கையாள "பணிச்சுவை" என்று அடுத்து வரும் கவிதையில் காணலாம்)
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
இறங்கிய வேகத்தில் வேகத்தில் வேகம் எடுத்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
தேர்தல் களம் காண தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!
திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. அம்ரித் பாரத் ரயில்.. தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பெண்ணுக்கு பேருதவி.. எது தெரியுமா?
எல்லாமே சக்தி (It's All About Energy)
தைப்பூசமும் வள்ளலாரும்.. உணர்த்தும் அருட் பெரும் செய்தி!
நீதி சொல்ல இத்தனை நூல்களா.. தமிழின் தனிப்பெருமை.. உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
{{comments.comment}}