மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன விருத்திமான் சஹா, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் ஆடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார் சஹா.
தற்போது ரஞ்சிப் போட்டிகளில் ஆடி வருகிறார் சஹா. இதுவே தான் கலந்து கொள்ளும் கடைசி கிரிக்கெட் தொடர் என்று அவர் அறிவித்துள்ளார். கடந்த மாதம்தான் 40 வயதை எட்டினார் சஹா. இந்தியாவுக்காக இவர் பெரிய அளவில் விளையாடவில்லை, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 40 டெஸ்ட் போட்டிகளிலும் 9 ஒருநாள் போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார். யாருக்காவது காயம் என்றால்தான் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
அதேசமயம், தோனி ஓய்வு பெற்ற பின்னர் இவருக்கு தொடர்ச்சியாக சில போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிகளிலும் கூட இவர் சில சாதனைகளைச் செய்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே அதிக டெஸ்ட் சதம் அடித்த 2வது வீரராக தோனி, ரிஷாப் பந்த்துக்குக்கு அடுத்த இடத்தில் சஹா உள்ளார். 3 சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் விளாசியுள்ளார்.
2021ம் ஆண்டு கடைசியாக தனது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார் சஹா. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி அது. அந்தத் தொடரில் சஹா நன்றாகவே ஆடியிருந்தார். ஆனாலும் அவரது வயதை கருத்தில் கொண்டு படிப்படியாக அவரை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு கே.எஸ். பரத், ரிஷாப் பந்த் ஆகியோரை அதிகம் பயன்படுத்த அப்போதைய கோச் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் முடிவெடுத்ததால் சஹாவின் சகாப்தம் அப்படியே முடிவுக்கு வந்தது.
சஹா ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து விளையாடி வந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் விளையாடியயுள்ள சஹா, கடைசியாக விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணியில்தான். கடந்த 3 வருடமாக அதில் விளையாடி வந்த சஹாவை அந்த அணி தற்போது ரீட்டெயன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் சஹா விளையாடப் போவதில்லை. தனது பெயரை அவர் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியுள்ளார் விருத்திமான் சஹா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}